![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpplQTMNekvRbTbpxOMBj3v89LxeT997sdSqwKD91cG86Uket1AMLM82anypWoNGR-mD0tpvvxcScax0tLG1_72wwVTqCYUKRJeISevfsZhbbx4dmVgfrIchofiWK08ttkmDuTPwRM9bE/s320/friends.png)
அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
அடுத்ததுதான் ஆண்டவன்
அவனுக்கும் நேரமில்லை
அதற்குத்தான் ஒரு நண்பன்
கூடப்பிறந்தது சகோதரம்
கூடியதால் பிறந்தது குழந்தை
கூப்பிட்டால் வருவாள் மனைவி
கூடவே வருவான், அவன்தான் நண்பன்
தீயவற்றை எனக்குச் சுட்டி
நல்லவற்றுக்குத் தோள் தட்டி
நியாய அநியாயங்களைக் காட்டி
விளக்கி நிற்பான் நல் நண்பன்
நாள் முழுதும் இருந்து- கதை
ஆயிரம்தான் பேசினாலும்- நண்பன்
பிரியும் நேரத் தோள் தட்டு
நாலாயிரம் கதை பேசும்
நட்பாகப் பழகுகிறார்
நாகரிக அப்பாமார்
Generation gapஐ இங்கு
நட்புத்தான் நிறைக்குதென்று
நடைமுறை உலகத்தில்
நட்புத்தான் குறைந்துபோச்சு
நட்புக்கும் இணயத்தை
நாடவேண்டிய நிலையாச்சு
நட்புக்கு உயிரையே
கொடுத்தான் கர்ணன் பாரதத்தில்
உன் நட்புக்கு நீ அப்படியா
கேட்டுப்பார் உன் அகத்தில்.