Tuesday, April 01, 2025

Wednesday, February 1, 2012

வேண்டாம்.. விலகிவிடு!

14 comments


காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது

வேண்டாம் விலகிவிடு



வேண்டாம்.. விலகிவிடு!
மரணத்தின் வலிகூட 
மரத்துப்போன பிறகும் - உன்
வார்த்தைகள் வலிக்கிறது..!


வேண்டாம்.. விலகிவிடு!


காலங்கள் கடந்து 
காப்பியமாய்க் கிடக்க - காதல்
முடிந்ததென்று நீயோ
முற்றுப்புள்ளி இடுகிறாயே..!


வேண்டாம்.. விலகிவிடு!


கற்கள் கேட்கிறாயே நீ - இந்தக்
காதல் கொண்ட கடைக் கவியிடம்
சொற்கள் மட்டும்தானே
சொந்தமாய் இருக்கின்றன!


வேண்டாம்.. விலகிவிடு!


யதார்த்தம் பேசுகிறாய் நீ - அது 
முடியாதவர்களின் 
முட்டாள் வியாக்கியானம்..!
யதார்த்தம் பார்த்தா காதலித்தோம்?
யதார்த்தம் பார்த்தா கொடுத்தாய் முதல் முத்தம்?
அதில் கலந்திருந்த சிறு வெட்கம் - இன்னும்
எஞ்சியிருக்கும் வெப்பம்
அது போதும் எனக்கு!


வேண்டாம்.. விலகிவிடு!


என்
கவிதைகள் கசக்கிறதா உனக்கு? - சொல்
மௌனம் பேசப் பழகிக்கொள்கிறேன்
என் கண்ணீர் கனக்கிறதா உனக்கு? - சொல்
போலிப் புன்னகை பூசிக்கொள்கிறேன்
மரணம் கேட்கிறாயே நீ - மறந்தாயா
நம் காதல் கதையில் காலனுக்கு இடமில்லை!


வேண்டாம்.. விலகிவிடு!


நீ வாழத்தொடங்கு
நான் வாழ்க்கையைத் தொடர்கிறேன்


வேண்டாம்.. விலகிவிடு!

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy