Wednesday, April 29, 2009

Facebookஐத் தமிழில் பயன்படுத்துவது எப்படி?

19 comments

Facebookஐ
பலர் ஆங்கிலத்திலேயே பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் Facebook உலக மொழிகள்
அனேகமானவற்றில் பயன்படுத்தும் வசதியைக் கொண்டுள்ளது. நீங்கள் கேட்பது
எனக்குப் புரிகிறது. Facebookஇன் மொழிமாற்றப் பகுதியில் தமிழைக் காணவில்லை
என்றுதானே? Facebook தமிழில் இப்போதுதான் மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது.
எனவே அது தமிழை முழுவதுமாக மொழிமாற்றி முடிக்கும்வரை அங்கே அனுமதிக்காது.
ஆனால் இதுவரை மாற்றப்பட்ட சொற்களைக்கொண்ட தமிழில் Facebook
பயன்படுத்தலாம். அதேபோல் நீங்களும் மொழிமாற்றத்திற்கு உதவலாம். அது
எப்படியா? இப்படித்தான். (படங்களைப் பெரிதாக்கிப் பார்க்கவும்)





முதல்ல Facebookல login ஆகுங்க. படத்தில காட்டின window open ஆகும். அதில படத்தில 
குறிக்கப்பட்டுள்ள Settings ஐக் கிளிக் பண்ணுங்க.




இந்த window open ஆகும். இதில Language ஐக் கிளிக் பண்ணுங்க.




அடுத்ததா வர்ற Window ல படத்தில காட்டியிருக்கிற மாதிரி Translation Application இணைப்பைக்
கிளிக்கி அடுத்த window க்குப் போங்க.




அது அந்த Application ஐ open செய்வதற்கான அனுமதியைக் கேட்கும். Allow என்ற Button ஐக் 
கி்ளிக்கி உள்ளே போங்க.




படத்தில இருக்கிற மாதிரி அந்த Application தெரி்யும். சிகப்பு வட்டம் போட்டிருக்கிற Combo box
ஐக் கிளிக் பண்ணி அதில தமிழ் இருக்கும், தேடி தெரிவுசெய்யுங்க.




படத்தில இருக்கிற மாதிரி எல்லாம் தமிழ்ல தெரியும். விரும்பினா படத்தில காட்டின
Translate Facebook என்ற இணைப்பைக் கிளிக்கி நீங்களும் facebookஐத் தமிழ்ல மாத்துறதுக்கு
உதவலாம். இல்லையா? முகப்பைக் கிளிக் பண்ணி, முகப்புக்கு வாங்க.



படத்தில காட்டின முகப்பில இருக்கிற மாதிரி எல்லாம் தமிழ்ல வந்திடும். திரும்பவும் 
இங்கிலீசில மாத்த படத்தில வட்டமாக் காட்டியிருக்கிறதைக் கிளிக் பண்ணி மாத்திக்கலாம்.



Tuesday, April 28, 2009

பேருந்துப் பயணம்

16 comments

எப்போது பார்த்தாலும்
வித்தியாசம் காட்டும்
என்றும் இனிக்கும்
சாலை ஓரங்கள்



ஏறியவுடனே என்னைப்பார்த்து
"முன்னே வா" எனக்கூறும், ஆனால்
மீதிச் சில்லறையில் எரிச்சலூட்டும்
நடத்துனன்



வீதி விபத்தைத் தடுப்பதற்கோ
இல்லை வீடு செல்லத் திரணியற்றோ
சைக்கிளையும் முந்த விடும்
சாமர்த்திய ஓட்டுணன்



கூட வரும் பயணிகளைப் பார்க்கயில்
சில சமயம் ஆதங்கங்கள்
பல சமயம் மனதில்
பூகம்பங்கள்



தனிமையில் பயணிக்கையில்
தானும் கூட வரும்
என்னுடைய phone இலுள்ள
Radio & Music player



எல்லாவற்றுக்கும் மேலாக
தனிமையில் நானிருக்க
ஏளனமாய் எனைப் பார்க்கும்
பக்கத்து சீட்



Sunday, April 26, 2009

Facebookஆல் வந்த வினை – உண்மைச் சம்பவம்

14 comments



Facebook ஆனது Social network களில் முதலிடம் வகிக்கின்றது. இதனுடன் இருந்தால் நேரம் போவதே தெரியாது என்பதால் இதை அலுவலக நேரங்களில் அலுவலகத்தில் பயன்படுத்த பல கம்பனிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வீட்டில், படுத்துக்கொண்டு தனது iphone இல் Facebook பாவித்ததற்காக வேலையை இழந்திருக்கிறார் ஒரு பெண்.

சுவிஸ் நாட்டைச் சேர்ந்த முனியம்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் அண்மைக் காலமாக ஒற்றைத் தலைவலியால் (migraine) அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் தன்னால் கணிணியைப் பயன்படுத்த முடியாது எனக் கூறி, அலுவலகத்தில் தனது கணிணி வேலையிலிருந்து வேறு துறைக்கு மாறியதுடன், தனக்கு இருளான அறை வேண்டும் என்றும் கேட்டு வாங்கியிருக்கிறார்.

ஆனால் இவர் Facebook பாவிப்பதை மட்டும் நிறுத்தவே இல்லை. இதை  அவதானித்து வந்த இவரது நிறுவனம் இவரை வேலையிலிருந்து நீக்கிவிட்டது. Facebook பயன்படுத்த ஒற்றைத்தலைவலியுடன் முடியுமானால் வேலை செய்ய ஏன் முடியாது எனவும் இது கேள்வி எழுப்பியுள்ளது.

இது எவ்வாறு சாத்தியமானது தெரியுமா? போலியான பெயரில் கணக்கு ஒன்றைத் தொடங்கிய இவர் வேலைபார்க்கும் நிறுவனம் தனது ஊழியர்களை நண்பர்களாக இணைத்துள்ளது. அதன் மூலமாக Facebookஇல் அவர்களது நடவடிக்கைகளை அவதானித்தும் வந்துள்ளது.

முன்ன பின்ன தெரியாதவங்களை Facebookல Friendஆ வச்சிருக்கிறவங்க பாத்துப் பத்திரமா இருங்கப்பா!

Thursday, April 23, 2009

நடிகர் விஜய்க்குக் கதை சொன்ன இயக்குனரின் நிலை??!!!

34 comments
 
நடிகர் விஜயின் வீடு. மணி மாலை ஏழாகிக்கொண்டிருந்தது. கோக், ஸ்னாக்ஸ் சகிதமாக விஜய் ஆஜர். இயக்குனர் பேரரசுவின் அசிஸ்ரன்ட்டாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த இளம் இயக்குனர் கதை சொல்லத் தொடங்குகின்றார்.


இயக்குனர் – சார், நான் கதை சொல்றேன். நீங்க அப்படியே ஸ்கிறீனில நடக்கிற மாதிரி இமேஜின் பண்ணிக்குங்க. இது டபுல் ஆக்டிங் சாப்ஜெக்ட் சார். அப்பா, மகன் ரெண்டு ரோலையும் நீங்கதான் பண்றீங்க. அப்பா றோலுக்கு கொஞ்சம் கெட்டப் சேஞ்ச் பண்ண வேண்டியிருக்கும்.

விஜய் – என்னங்க நீங்க, கெட்டப் சேஞ்ச், அது, இதுன்னுட்டு

இயக்குனர் இல்லசார், மகன் கேரக்டருக்கு மூணு நாள் தாடியோட வர்றீங்க. அப்பா கேரக்டருக்கு ஒருநாள் எக்ஸ்ரா, நாலு நாள் தாடி.

விஜய் – அப்ப ஓகே, மேல சொல்லுங்க.

இயக்குனர் – சார், படத்த ஓபன் பண்ணா, நீங்க பசங்களோட சேர்ந்து பம்பரம் விட்டு விளையாடீட்டு இருக்கீங்க. அப்ப வில்லனோட அளுங்க பசங்ககிட்ட பம்பரத்தைத் தரச்சொல்லி வம்புக்கு வராங்க சார். நீங்க உடனே கோபமாகி, பமுபரத்தை ரொம்ப ஸ்பீடா சுத்தி விடுறீங்க. அந்த ஸ்பீடுக்கு புழுதி எல்லாம் பறக்குது சார். அதைத் தாங்க முடியாம அவங்க ஓடுறாங்க சார்.  உடனே நீங்க பக்கத்துல இருந்த காய்கறி வண்டில்ல கால ஊண்டி யம்ப் பண்ணி மேல போயிட்டிருந்த ஏரோபிளேனை பிடிச்சுடுறீங்க சார். அப்படியே பிளைட்டில தொங்கிட்டே உங்க காலால வில்லனோட ஆழுங்களை எல்லாம் பந்தாடுறீங்க சார். பைட்டு முடிஞ்சதும் அப்படியே பறந்துபோய் லண்டனில லேன்ட் ஆகுறீங்க சார். அங்க பீச்ல பாரின் டான்சர்ஸ்சோட ஒரு பாட்டு வைக்கிறம் சார். A.R.  ரஜ்மான் சாருட்ட கூட பேசிட்டன்.


விஜய் – யாரு? A.R.R சாரா? ஓகே சொல்லிட்டாரா?

இயக்குனர் – ஆமா சார்.

விஜய் – சரி, மேல சொல்லுங்க.

இயக்குனர் – சாங் முடிஞ்சதும் அங்க இருந்து கப்பல்ல கிளம்பி இந்தியாவுக்கு வர்றீங்க. அந்தக் கப்பல்லதான் அறிமுகமாகிறாங்க ஐஸ்வர்யாராய் மெடம்.

விஜய் – யாரு?

இயக்குனர் – ஐஸ்வர்யாராய் சார், அவங்களத்தான் ஹீரோயினாப் போடுறதா இருக்கோம்.


விஜய் – சரி, மேல சொல்லுங்க.

இயக்குனர் – ஐஸ் அவங்க தாய்மாமனோட கப்பல்ல வந்திட்டிருக்காங்க சார். அந்தத் தாய்மாமன் றோலை வடிவேலு சார் பண்ணுறாரு. அவருக்கு ஐஸ்வர்யாராய் மேல லவ்வு. அத வச்சே கப்பல்ல காமெடி பண்றோம் சார்.

விஜய் – இன்ட்றஸ்டிங்….

இயக்குனர் – நீங்க வந்து காபரில இறங்குறீங்க சார். அங்கதான் வில்லனா அறிமுகமாகிறார் ஜக்கிச்சான்.

விஜய் – யாரு ஜக்கிச்சானா?

இயக்குனர் – ஆமா சார், அவரைத்தான் வில்லனாப் போடுறதா இருக்கோம். அனேகமா ஓகே சொல்லிடுவார். உங்க அம்மா றோலுக்குக் கூட மல்லிகா செரவத்தைத்தான் போடுறதா இருக்கோம்.

விஜய் – சரி, சொல்லுங்க.

இயக்குனர் – காபரில காபர் கான்ராக்ரறா அறிமுகமாகுறாரு ஜக்கிச்சான். அவரைக் கண்டவுடனேயே டாடீன்னுட்டு ஓடிப்போயி அவரைக் கட்டிக்கிறாங்க ஐஸ். உங்களுக்கோ பழைய ஞாபகங்களெல்லாம் வருது.

விஜய் – இங்கதான் அப்பா கேரக்டர் வருதா?

இயக்குனர் – கரெக்ட் சார், அப்படியே பிளாஸ்பேக்கில நீங்க அப்பாவா வரீங்க. உங்க வை(f)பா  மல்லிகா செரவத் இருக்காங்க. அதில நீங்க ஒரு நேர்மையான போலீஸ் ஆபீசரா வரீங்க. ஏரியா தாதாவா ஜக்கிச்சான் இருக்காரு. அவரைக் கள்ளச் சாராயக் கேஸில நீங்க உள்ள பிடிச்சுப் போட்டுறறீங்க. ஆறு மாசம் உள்ள இருந்துட்டு வர்ற அவர் உங்களைக் கொலை பண்ணிடறார்.

விஜய் – அவரை இப்ப மகனா நான் பழிவாங்குறன். அதானே கதை?

இயக்குனர் – எக்ஸாட்லி சார்.

விஜய் – வேணாங்க. இந்த மாதிரிக் கதையெல்லாம் எனக்கு இனிச் சரிவராது. இந்த டீவீடீ க்களப் பாருங்க. இந்தமாதிரி ஒரு கதையை ரெடி பண்ணிட்டு வாங்க. நாம கண்டிப்பாப் பண்ணலாம்.

விஜய் மூன்று டீவீடீ க்களை கையில் திணிக்கிறார். அதிர்ச்சியான இயக்குனர் அதைப் பார்க்கிறார். அந்த டீவீடீக்கள்

  • துள்ளாத மனமும் துள்ளும்!
  • காதலுக்கு மரியாதை!!
  • பூவே உனக்காக!!!

பி.கு – ஒண்ணும் இல்லீங்க. விஜய் இந்தமாதிரிப் படங்கள் பண்ணணுமுன்னு எனக்கு ஒரு ஆசை, லட்சியம், கனவு, எதிர்பார்ப்பு எல்லாமே!. விஜய் ரசிகர்கள்  வேணுமுன்னா அப்படியே அஜித்துக்கு ஏற்றமாதிரி வேண்ணா மாத்திப் படிச்சுக்கங்க.

Tuesday, April 21, 2009

மலைக்க வைக்கும் மரங்கள்!

15 comments
சூப்பரா இருக்கிற இந்த மரங்களோட படங்களும், என்னோட Comments உம் தந்திருக்கிறேன். பெரூஸ்ஸாத் தெரியணுமுன்னா கிளிக்கிப் பாருங்க. அப்படி்யே உங்க Comments உம் போட்டுடுங்க.


மரமா? மனிதனா?



கூடு எல்லாம் கட்டலிங்க. மரமேதான்.




ரெண்டுக்கும் லவ்வு வந்திரிச்சோ?



ஏதாவது புடுங்கணுமுன்னா ஏணி எல்லாம் தேவையில்லை



பஸ் ஸ்டாப் எல்லாம் இல்லிங்க



அண்ணாந்து பாத்துக் கழுத்துக்க புடிச்சிருச்சு



குகையா?



இந்தக் கோட்டையாவது கிடைக்குமா?



மரத்துக்கு உரம் போடுறாங்கப்பு!!!



தனக்குப் பதிலா கேஸ் சிலின்டர் வாங்கட்டுமாம்



என்ன சார் நடக்குது இங்க?



சூப்பர் டிசைன் இல்ல?



என்னங்க இது ?



எத்தனை மரமுன்னு எண்ணிச் சொன்னா பரிசெல்லாம் கிடையாதுங்க.


 பாத்தாச்சா? அப்ப ஓட்டு யாரு்ங்க குத்துறது?

எனக்குப் பிடித்தது ஒன்னாவதும், ஓம்போதாவதும். உங்களுக்கு?

Monday, April 20, 2009

பச்சை ??!!!

10 comments
 
Green. இன்று பல நிறுவனங்கள் தமது பொருட்களை விளம்பரப்படுத்தும்போது பயன்படுத்தும் சொல். மனிதன் தனது எதிர்காலச் சந்ததியைக் குறித்தும் சிந்திக்கத்தொடங்கிவிட்டான் என்பதற்கு அடையாளச் சொல்லாகவும் கருதலாம். பல இடங்களிலே இது பெயரளவில் தான் என்றாலும் இது இருக்கவேண்டும் என்ற நிலைக்கு இன்று வந்துவிட்டது. பல விளம்பரங்களிலும் இது முக்கியமாக இடம்பெறுவதே இது தொடர்பான விழிப்புணர்வுக்குக் ஆதாரம் எனலாம்.

சரி, Green என்றால் என்ன? சுற்றுச் சூழலுக்குப் பாதகமில்லாமல் பொருட்களைத் தயாரிப்பதும், அவற்றைப் பயன்படுத்தும்போது அவை சூழலுக்குப் பாதகமில்லாமல் இருப்பதும், பின் அவற்றை அழிக்கும்போதும் எந்தவொரு பாதகத்தையும் ஏற்படுத்தாமல் இருப்பதும் ஆகும்.

உதாரணத்திற்கு உங்களையே எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அலுவலகத்தில் கணினியில் வேலை செய்கிறீர்கள். அப்போது அது உலக வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் அது அதிக சக்தியை (மின்னை) உறிஞ்சும். பின் அக்கணினி பழையது எனத் தூக்கிக் கடாசும்போதும் அதிலிருந்து வரும் கதிர்வீசல்கள் சூழலைப் பாதிக்கும். அது உங்கள் சந்ததிக்கு மட்டுமல்ல, எதிர்காலச் சந்த்திக்கும் தொல்லை கொடுக்கும்.

இதை உணர்ந்தே பல நிறுவனங்கள் Green தொழில்நுட்பத்தை தாம் பாவிப்பதை முக்கிய விளம்பரமாகக் கூறுகின்றன. Green தொழில்நுட்பத்தில் உருவான உபகரணம் இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களைக் கொண்டு ஆக்கப்பட்டிருக்கும். இவை உபயோகத்தின்போது குறைந்த சக்தியையே உறிஞ்சும். இலகுவாக மீழ்சுழற்சி செய்யக்கூடியதாகவும் இருக்கும்.

இவ்வாறான மின்சாதனங்களில் மட்டுமல்ல, சேவைகள், விளம்பரப்படுத்தல், முகாமைத்துவம் போன்றவற்றிலும் Green நுளைந்துவிட்டது. எந்தவோரு சேவையையும், வேலையையும் சுற்றுப்புறச் சூழலுக்குப் பாதகமில்லாமல் செய்வதே இதன் நோக்கமாகும்.

இனிமேல் பொருட்கள் வாங்கும்போதும், ஏதாவது சேவைகள் பெறும்போதும், வேலைகள் செய்யும்போதும் இந்தப் பச்சையையும் கொஞ்சம் கவனித்துக்கொள்ளுங்களேன்!

Saturday, April 18, 2009

உலகின் முதலாவது குளோனிங் ஒட்டகம்!

12 comments
 உலகின் முதலாவது குளோனிங் ஒட்டகத்தை துபாயைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்தப் பெண் ஒட்டகத்திற்கு இன்ஜாஸ் எனப் பெயரிட்டுள்ளனர். இன்ஜாஸ் என்றால் சாதனை என அர்த்தமாம். அத்துடன் இது இறந்துபோன ஒரு ஒட்டகத்திலிருந்து எடுக்கப்பட்ட கலத்திலிருந்தே உருவாக்கப்பட்டுள்ளது என்பது மேலும் சிறப்பாகும். இவ்வளவு காலமும் தாயிலிருந்து எடுக்கப்பட்ட கலமே குளோனிங்கிற்குப் பயன்பட்டது.
தாயுடன்(?) இன்ஜாஸ்

இதை நான் முதன்முதல் அறிந்தபோது எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. குளோனிங் இஸ்லாத்திற்கு முரணானது என்று எங்கேயோ படித்த ஞாபகம். ஆனால் இஸ்லாமிய நாடான துபாயில் இது எவ்வாறு சாத்தியமானது? இது குறித்து நான் இணையத்தில் தேடியபோது அங்கே அவர்கள் இதைத் தெளிவுபடுத்தியிருந்தார்கள். அதாவது இந்தக் குளோனிங்கால் எந்த விலங்கையும் கொடுமைப்படுத்தவில்லை. அத்துடன் இறந்துபோன ஒட்டகத்தைப்போலவே இன்னுமொரு ஒட்டகம் உருவாகப்போகிறது. உயிருடன் இருப்பதைப்போலல்ல. மூன்றாவதாக குளோனிங் ஒட்டகம் உண்மையான ஒட்டகத்தைவிட சிறப்பான எந்த ஒரு இயல்பையும் கொண்டிருக்கப்போவதில்லை. எனவே இது இஸ்லாத்திற்கு விரோதமானதல்ல எனச் சொல்கிறார்கள்.





ஆனால் மனிதனை குளேனிங்கில் உருவாக்குவது இஸ்லாத்திற்கு முரணானதாகச் சொல்கிறார்கள். ஏனெனில் இறைவனின் படைப்பில் ஒவ்வொரு மனிதனிற்கும் தனித்துவம் இருக்கும். குளோனிங் அதை மாற்றிவிடும். இதனால் சமனிலை குழம்பும். அத்துடன் ஆண் – பெண் சமனிலையும் குழம்பிவிடும். அத்துடன் புதிய உயிருக்கான ஆண் – பெண் தேவையை இது இல்லாமல் செய்துவிடும். ஆனால் என்னைப்பொறுத்தவரை இவை மிருகங்களிற்கும் பொதுவானவை. இருக்க மனிதனிற்கு மட்டும் கூறப்படுவது ஏன் எனப் புரியவில்லை. இஸ்லாமிய நண்பர்கள் தெளிவுபடுத்தினால் நல்லது. மற்ற மதங்களின் குளோனிங்கைப்பற்றிய நிலைப்பாடு தேடியும் கிடைக்கவில்லை.





சரி, என்றாவது ஒருநாள் குளோனிங் மனிதன் உருவாகப்போவது நிச்சயம். அவனது அடையாளங்கள் எப்படி இருக்கப்போகிறது? தனக்கென சுயமாக அடையாளத்தை உருவாக்கிக்கொள்வானா? இல்லை, குளொனிங்கால் பெற்ற அடையாளங்களோடு வாழ்வானா? தாய் தந்தை என அவனுக்கு எவ்வாறு வரையறுப்பது? அவனை எவ்வாறு வித்தியாசப்படுத்தி அடையாளப்படுத்துவது? இதனால் உலகின் ஆண் – பெண் சமனிலையும், தொழில் சமனிலையும் பாதிக்கப்படாதா? இருக்கும் சனத்தொகைப்பெருக்கத்திற்கு இதன் அவசியம் என்ன? இதனால் மனிதன் முழுவதுமாக இயந்திரமாக மாறமாட்டானா? எனக்குத் தெரியவில்லை. யாராவது பின்னூட்டத்தில் தெழிவுபடுத்துங்களேன்.

Friday, April 17, 2009

சின்னதா இருந்தாலும் சூப்பர்தான்!

8 comments
எல்லேரும் பெரிய பெரிய மேட்டர்களில தான் ரொம்ப விருப்பமா இருப்பாங்க. ஏன் சின்னதா இருந்தா குறைச்சலா? இதப் பாருங்க

தொடருமா ரயில்பயண சுவாரஸ்யங்கள்???

7 comments




யானை, கடற்கரை, ரயில் மூன்றையும் பார்க்கப் பார்க்க சலிக்காது, பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்பார்கள். ரயிலைப் பார்ப்பது மட்டுமல்ல, அதில் பயணம் செய்வதும் இனிமைதான். கணத்திற்குக் கணம் மாறும் காட்சிகளும், பக்கத்து சீட்டு வறுவல்களும், என்றும் மறக்க முடியாதவை. யன்னலினூடும், மிதி பலகையிலில் நின்றுகொண்டும் தலையை நீட்ட ஜில் என்று தழுவிச்செல்லும் காற்றும், எதிரில் வரும் ரயிலைக் கண்டதும் ‘விருட்’ என்று தலையை உள்ளே இழுக்கும் கண நேரத்துப் பயமும், ரயிலின் தாலாட்டும் நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியவேண்டும் என்பதில்லை.


இன்று விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. எல்லாவற்றிலும் அவசரம் தேவை மனிதனுக்கு. ரயிலிலும் மாற்றங்கள். மின்சார ரயில், மிதக்கும் ரயில், அதிவேக ரயில் பறக்கும் ரயில், பாயும் ரயில் என்று எதையெதையோ கண்டுபிடித்துவிட்டான். மாற்றம் ஒன்றுதான் உலகில் மாற்றமே இல்லாதது. கால மாற்றத்தில் பழையன கழிதலும், புதியன புகுதலும் சாதாரணமானது, ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே. ஆனால் கழிந்துபோகும் இவை மனிதனின் மனிதத் தன்மையையே மாற்றி, அவனை இயந்திரத்தைப்போல அல்லவா ஆக்கிவிடுகின்றது?


இன்றய சீறிப்பாயும் ரயில்களின் வேகத்திற்கு யன்னலினூடு தெரிவது வேறும் உருவக் கீற்றுக்கள்தான். யன்னல் என்பதும் வெறும் பெயருக்குத்தான். முழுவதும் மூடப்பட்டுக் கண்ணாடி இடைவெளி ஆங்காங்கே விடப்பட்டிருந்தால் அதுதான் யன்னல். ஏதோ விமானத்தில் பயணிப்பது போலவே இருக்கிறது அது. ஜில் என்ற காற்று A.C துவாரத்தினூடுதான் வருகின்றது. Laptop உடன் மூழ்கிவிடும் பக்கத்துசீட்டின் முகம்கூட ஞாபகம் இருக்காது பலருக்கு இறங்கும்போது. மிதிபலகையை அண்டவிடாத தானியங்கிக் கதவுகள் பாதுகாப்புத்தான் என்றாலும் சிறைச்சாலை போன்ற உணர்வுதான். என்னைப் பொறுத்தவரை இந்த அதிவேக ரயில்கள் வேகமாக எடுத்துச் செல்வது மனிதர்களை மட்டுமல்ல, அவர்களின் சின்னச்சின்ன சந்தோசங்களையும்தான்.


Wednesday, April 15, 2009

மேசை வடிவில் ஒரு கணினி!!!

2 comments



Microsoft Surface – சிலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். மேசை வடிவில் இருக்கும் இதற்கு Keyboard, Mouse எல்லாம் தேவையே இல்லை. எல்லா வேலைகளுமே கைகளால் முடித்துவிடலாம். ஏதோ மேசையில் இருக்கும் பொருட்களை எடுத்து வைப்பது போல இதிலுள்ள File களைக் கையாளலாம். முழுவதும் Touch screen ஆன இதில் Drag and drop எல்லாம் அவ்வளவு எளிது. அப்புறம் இன்னுமொரு முக்கியமான விடயம், அவசரத்திற்கு இதை மேசையாகவும் பயன்படுத்தலாம். வீட்டில் இட நெருக்கடி என்றால் ரொம்ப யூஸ்புல் இல்லையா?. இனி சுவர், கூரை எல்லாம் இப்படித்தான் பயன்படப் போகிறதோ?




Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy