Showing posts with label மின்னியல். Show all posts
Showing posts with label மின்னியல். Show all posts

Monday, December 21, 2009

பறக்கும் பட்டத்திலிருந்து பிறப்பிக்கப்படும் மின்சாரம் – புதிய கண்டுபிடிப்பு

12 comments


Wind turbines


காற்றின் சக்தியைச் சரியாகப் பயன்படுத்தினால் உலகின் மின்தேவையைவிட 100 மடங்கு அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். காற்றைக்கொண்டு மின்சாரம் பிறப்பிப்பதற்கு காற்றாலைகளை அமைத்து காற்றாடிகள் மூலமே (Wind turbines) இதுவரை காலமும் மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. புவி மேற்பரப்பிலிருந்தான உயரம் அதிகரிக்கும்போதே காற்றின் வேகம் அதிகரித்து பெறக்கூடிய மின்சாரமும் அதிகரிக்கும். ஆனால் அவ்வளவு உயரத்துக்கு காற்றாடிகளை அமைப்பது என்பது முடியாத காரியம். எனவேதான் புவி மேற்பரப்பிலிருந்து அதிக உயரத்தில் இருக்கும் காற்றின் சக்தியை பயன்படுத்துவதற்காக பட்டத்தைப் பயன்படுதும் புதிய முறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள். இதற்கு Kitegen எனப் பெயரிட்டுள்ளார்கள்.



Kitegen

பட்டத்தை மேலே பறக்கச்செய்வதற்கு இரு பெரிய சுழல்விசிறிகளோடு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தளம் இதற்குப் பயன்படுகிறது. இவ்விசிறிகள் உயரத்தில் தொடற்சியான காற்றுக்கு பட்டத்தைக் கொண்டுசெல்ல உதவுகின்றன. அதில் கம்பிகளின் மூலம் பட்டங்கள் இணைக்கப்படுகின்றன. இக்கம்பிகள் பட்டத்தின் உயரத்தையும், திசையையும் கட்டுப்படுத்துகின்றன. சுமார் 2000 மீட்டர் உயரம்வரை இவை பறக்கவிடப்படுகிறது.

இவ்வாறு பறக்கவிடப்பட்ட பட்டங்கள், அவை இணைக்கப்பட்டிருக்கும் தளத்திலுள்ள மின்பிறப்பாக்கியைச் சுழலச்செய்கின்றன. இதன்மூலம் பெருமளவு மின்சாரம் பிறப்பிக்கப்படுகிறது.

இங்கே முக்கியமான விடயம், இவ்வாறு பறக்கவிடப்படும் பட்டங்களின் பறப்பை தரையிலிருந்தே கட்டுப்படுத்தக்கூடியதாக இருப்பதாகும். இவ்வாறு கட்டுப்படுத்தி, பெறப்படும் மின்சாரத்தின் அளவையும் மாற்றிக்கொள்கின்றனர். அதுமட்டுமல்லாது பறக்கவிடப்படும் பட்டங்கள் பறவைகளைப் பாதித்துவிடாது இருப்பதற்காக ரேடார் மூலம் பறவைகள் கண்காணிக்கப்பட்டு, அதற்கேற்ப பட்டங்கள் பறக்கவிடப்படுவதுதான்.

இது காற்றாலைகளைப்போல அதிக இடத்தை அடைக்காது என்பதுடன் அதிக மின்சாரத்தினையும் குறைந்த செலவில் பெற்றுக்கொள்ளலாம். அதிகரித்துவரும் மின்தேவைக்காக எரிபொருட்களைப் பயன்படுத்தி மின்சாரம் பிறப்பித்து, சூழலையும் மாசாக்குவதைவிட இவ்வாறான கண்டுபிடிப்புகள் வரவேற்கத்தக்கவையே!

இதன் தொழிற்பாட்டைக் கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.


Tuesday, October 13, 2009

வயர் இல்லா மின்னோட்டம்

10 comments


இந்த Wireless Electricity பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். வயர்களைப் பயன்படுத்தாமல் வீடுகளிலேயே மின்சாரத்தை பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இந்தத் தொழில்நுட்பம் மின்காந்த அலைகளைப் பயன்படுத்தி வெற்றிகரமாக செயற்படுத்தப்படுகிறது. மின்சாரத்தைப் பயன்படுத்தி மின்காந்த அலைகளை உருவாக்கி, அந்த மின்காந்த அலைகளை காற்றினூடு கடத்தி, மின்சாரம் உபயோகிக்கவேண்டிய பொருளில் உள்ள சிறிய தொழில்நுட்பம் மூலம் அந்த மின்காந்த அலைகளை மீண்டும் மின்சாரமாக்குவதன்மூலம் வயர்கள் இல்லாது மின்சாரம் கடத்தப்படுகிறது.

இவ்வாறு மின்காந்த அலைகளை வளியினூடு கடத்தும்போது அதனால் மனிதனுக்கோ, ஏனய உயிரினங்களுக்கோ எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாது. இதுதொடர்பான மேலதிக தகவல்கள் அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.




டிஸ்கி - வீடியோ கொஞ்சம் பெரியதுதான். இறுதிவரை பாருங்கள். அங்கே நேரடிச் செய்முறை காட்டப்படுகிறது.

Saturday, June 20, 2009

தன்னைத் தானே சார்ச் செய்யும் செல்போன் ஆராய்ச்சியில்!!!

11 comments
Wireless Electricity பற்றிய ஆராய்ச்சிகள் படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருகின்றன. Nokia நிறுவனம் இது தொடர்பான தனது ஆராய்சிகள் ஓரளவு வெற்றிபெற்றுள்ளதாகக் கூறியுள்ளது.


இது கையடக்கத்தொலைபேசி, தொலைக்காட்சி, அன்ரனாக்கள் முதலியவற்றிலிருந்து பிறப்பிக்கப்படும் மின்காந்த அலையைக்கொண்டு மின்சாரம் தயாரிப்பதில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. 5 milliwatts அளவுள்ள மின்சாரத்தை தற்போது தயாரிக்க முடிவதாக அது தெரிவித்துள்ளது. 50 milliwatts அளவுள்ள மின்சாரத்தைத் தயாரிப்பதே தமது இலக்கு என்றும், அந்த மின்சாரம் ஒரு செல்போன் பேட்டரியை சார்ச் செய்யப் போதுமானது எனவும் கூறியுள்ளது.

இந்தத் தொழில்நுட்பம் வெற்றிபெற்றால் செல்போன்கள் தம்மைத் தாமே சார்ச் செய்துகொள்ளும் எனவும், மின்சாரம் தேவையில்லை எனவும் அது தெரிவித்துள்ளது.


எதிர்காலத்தில்??!!!
Wireless Electricity தொடர்பாக அறிந்துகொள்ள எனது இந்தப் பதிவைப் பாருங்கள்.


Friday, June 12, 2009

அடிச்சது ஷாக் 600V, கந்தசாமி, இன்ன பிற..

10 comments
எனக்கு கம்பஸ்சில எக்ஸாம் நடந்துட்டிருக்கு. வழக்கம்போல நம்ம வண்டியும் குப்பியில ஓடிட்டிருக்கு. ( குப்பி தெரியாதவர்கள் இங்கே போய்ப் பார்த்துக்கொள்ளவும்) . இன்னிக்கு ரொம்ப நல்ல சாப்ஜக்ட். ஏன்னா கொஸ்டீன் எல்லாம் நல்லாப் புரியும். ஆன்சர்தான் பண்ண முடியாது. நண்பன் ஒருத்தன் சொன்னான் “ மச்சான், ஆன்சர் தெரியலீன்னா ஏதோ தெரியறத எழுதிடுவம், ரெண்டு மார்க்சாவது போடாமலா மோயிடுவான் ” ஏதோ புதுசாக் கண்டுபிடிச்ச மாதிரி. “ அடப்பாவி, இதத்தாண்டா ரெண்டு வருசமா எல்லா எக்சாம்லயும் பண்ணிட்டிருக்கேன்!!!”

*******************************

இதுவும் கம்பஸ் மேட்டர்தான். Power System சம்பந்தமான ஒரு ப்ராக்டிகல். நான் கனெக்சன் கொடுத்து முடிக்கிறதுக்குள்ள ஒரு படுபாவிப்பய Switch  ஆன் பண்ணிட்டான். சும்மா இல்ல, 600V. எந்தப் பிறப்பில யாருக்குச் செஞ்ச புண்ணியமோ, உயிருக்கு வந்தது தலையோட போய்ட்டுது. நாலு நாள் தலைவலி உயிர எடுத்துது. ஆனா பாவம். அந்த இன்ஸ்ருமன்ட்தான் வடிவேலு மாதிரி வாயாலயும் மூக்காலயும் புகைய விட்டுட்டு அடங்கிடுச்சு.

********************************

எக்ஸாம்கிறதால வேள்டு கப் கிரிக்கட் பாக்கவே முடியல. இன்னிவரைக்கும் ஒரு மேட்ச் கூடப் பாக்கல. ஆமா, ஆஸ்திரேலியாவ அடிச்சுத் துரத்திட்டாங்களாமே நம்மாளுங்க, உண்மையா? எப்படியோ, பைனலுக்கு முதல் எக்ஸாம் முடிஞ்சுடும். அப்பாடா…

**********************************

 பதிவு திருடற விசயம் ரொம்ப சூடாப் போயிட்டிருக்கு. என்னோட பதிவு ஒன்றையும் சுட்டுட்டாங்க. முதல்ல கொஞ்சம் கோபம் வந்தது. அப்புறமா, அட நம்ம பதிவையும் சுடறாங்களேன்னு சந்தோசப்பட்டேன். நேற்று இந்த விசயத்துல இங்க கும்மி அடிச்சிட்டிருந்தேன். நண்பர் சித்து  ஏதோ ஒரு கோடை சேத்துட்டா யாராலயும் காப்பி பண்ண முடியாதுன்னார். அப்படி செய்தா பின்னூட்டம் இடுறவங்களுக்கு எரிச்சலா இருக்காதா? எவனோ ஒருத்தனுக்காக நம்ம நண்பர்களை ஏன் கஸ்டப்படுத்தணும்?

********************************


கந்தசாமி பாடல்கள் நெட்டில டவுன்லோட் பண்ணிக் கேட்டேன். அயனுக்கு அப்புறம் எல்லாப் பாடல்களுமே பிடிச்சிருக்கறது இதிலதான். விக்ரமுக்கும் படம் லேட்டாவுறதுக்கும் என்னதான் ஒற்றுமையோ? ஸ்டில்சைப் பாக்கிறப்பல்லாம் என்னவோ பண்ணுது. படத்துக்காக வெயிட்டிங்…

Sunday, May 10, 2009

செல்போன் பாவனையாளர்களே ஒன் நிமிட்.. கவனம்!!!

5 comments
 
அண்மையில் அரபு நாடொன்றில் நடந்த சம்பவம் இது. தனது செல்போனை சார்ச் செய்யப் போட்டுவிட்டு உறங்கப்போன அவருக்கு சிறிது நேரத்தில் சிணுங்கிய செல்போன் எரிச்சலைக் கொடுத்தாலும் எடுத்துக் காதில் வைத்தார். ஆனால் அவர் அதனை சார்ச் செய்வதிலிருந்து கழற்றவில்லை.

சிறிது நேரம்தான் பேசியிருப்பார். திடீரென்று அதிகமாக பாய்ந்த மின்சாரம் அவருக்கு மின்அதிர்வை உண்டுபண்ணியதுடன் செல்போனும் வெடித்து எரியத் தோடங்கிவிட்டது.

எரிந்த படுக்கை


சத்தம் கேட்டு வந்த பெற்றோர் குறைவான இதயத்துடிப்புடன் சுயநினைவற்றுக்கிடந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அதற்குள் அவரது உயிர் பிரிந்துவிட்டது.

கையில் தீக்காயம்

செல்போன்  இன்று மிகவும் உபயோகமான சாதனம்தான். ஆனால் அதனால் உயிரைக்கூட எடுக்கமுடியும் பார்த்தீர்களா? ஒருபோதும் சார்ச் செய்யும்போது செல்போனில் பேசாதீர்கள்.

Friday, April 3, 2009

கனெக்சன் எடுக்க‍க் கஸ்டமான இடம்!

2 comments
முடிநதால் இநத மின் கம்பங்களிலிருநது ஒரு கனெக்ச‌ன் எடுத்துக் காட்டுங்களேன்

மின்சாரவியலின் அடிப்ப‍டையைக் கூறிய Kerchoffவே இதைப்பார்த்து மயங்கி விழுநதுவிட்ட‍தாக்க் கேள்வி









Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy