Wednesday, February 1, 2012

வேண்டாம்.. விலகிவிடு!




காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது

வேண்டாம் விலகிவிடு



வேண்டாம்.. விலகிவிடு!
மரணத்தின் வலிகூட 
மரத்துப்போன பிறகும் - உன்
வார்த்தைகள் வலிக்கிறது..!


வேண்டாம்.. விலகிவிடு!


காலங்கள் கடந்து 
காப்பியமாய்க் கிடக்க - காதல்
முடிந்ததென்று நீயோ
முற்றுப்புள்ளி இடுகிறாயே..!


வேண்டாம்.. விலகிவிடு!


கற்கள் கேட்கிறாயே நீ - இந்தக்
காதல் கொண்ட கடைக் கவியிடம்
சொற்கள் மட்டும்தானே
சொந்தமாய் இருக்கின்றன!


வேண்டாம்.. விலகிவிடு!


யதார்த்தம் பேசுகிறாய் நீ - அது 
முடியாதவர்களின் 
முட்டாள் வியாக்கியானம்..!
யதார்த்தம் பார்த்தா காதலித்தோம்?
யதார்த்தம் பார்த்தா கொடுத்தாய் முதல் முத்தம்?
அதில் கலந்திருந்த சிறு வெட்கம் - இன்னும்
எஞ்சியிருக்கும் வெப்பம்
அது போதும் எனக்கு!


வேண்டாம்.. விலகிவிடு!


என்
கவிதைகள் கசக்கிறதா உனக்கு? - சொல்
மௌனம் பேசப் பழகிக்கொள்கிறேன்
என் கண்ணீர் கனக்கிறதா உனக்கு? - சொல்
போலிப் புன்னகை பூசிக்கொள்கிறேன்
மரணம் கேட்கிறாயே நீ - மறந்தாயா
நம் காதல் கதையில் காலனுக்கு இடமில்லை!


வேண்டாம்.. விலகிவிடு!


நீ வாழத்தொடங்கு
நான் வாழ்க்கையைத் தொடர்கிறேன்


வேண்டாம்.. விலகிவிடு!

14 comments:

Anonymous said...

supperf da keep it up....

Jay on February 1, 2012 at 11:16 PM said...

Sooper nanba!

Sinthu on February 1, 2012 at 11:20 PM said...

Super Anna.. After a long time visiting ur blog.
Great counterpart...:)

நிரூஜா on February 1, 2012 at 11:38 PM said...

அப்பு இரப்பு! உனக்கு மறுபடியும் ஆப்பு தயார்!
நாளைக்கு தான் அரங்கேறும்.

கவிதை சூப்பர் பாஸ்!
எனது முதற் கவிதைக்கான பல ஏக்கங்களுக்கு
இங்கே விடை கான முயன்றிருக்கிறாய்.
வாழ்த்துக்கள்!

Bavan on February 2, 2012 at 8:58 AM said...

ஆஹா! ஆரம்பிச்சுட்டாங்கையா!

கவிதை கலக்கல்ஸ் :-))

chenthoo on February 2, 2012 at 10:54 AM said...

சூப்பர் அப்பு

சசிகலா on February 2, 2012 at 12:05 PM said...

மிகவும் அருமைங்க காதலில் சோகம் மட்டும் மிஞ்சாமல்
நீ வாழத்தொடங்கு
நான் வாழ்க்கையைத் தொடர்கிறேன்

சிறப்பான முடிவு

MATHUKARAN on February 2, 2012 at 6:44 PM said...

யதார்த்தம் பேசுகிறாய் நீ - அது
முடியாதவர்களின்
முட்டாள் வியாக்கியானம்..!
யதார்த்தம் பார்த்தா காதலித்தோம்?
யதார்த்தம் பார்த்தா கொடுத்தாய் முதல் முத்தம்?
அதில் கலந்திருந்த சிறு வெட்கம் - இன்னும்
எஞ்சியிருக்கும் வெப்பம்
அது போதும் எனக்கு!

super.............

anuthinan on February 2, 2012 at 7:51 PM said...

பாஸ் மறுபடியும் நீங்களும் எழுத வருவீங்க எண்டு சொல்லவே இல்லையே!

எதிர்கவிதையும் அமர்களமாக இருக்கு! நடத்துங்கோ!

திண்டுக்கல் தனபாலன் on February 3, 2012 at 7:40 AM said...

அழகான அருமையான கவிதை ! வாழ்த்துக்கள் ! பாராட்டுக்கள் ! நன்றி சார் !

Anonymous said...

supper machci

nadinarayanan on June 1, 2012 at 9:28 AM said...

arumaiyaana kavithai nanba
en valaipoovaiyum paarvai idungalen

baskar on February 9, 2013 at 9:42 PM said...

grt...

நங்கூரம் on November 28, 2014 at 10:36 PM said...

nice

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy