Saturday, February 28, 2009

Sorryயும், மன்னிப்பும்

4 comments



Sorry ற்கும், மன்னிப்பிற்கும் அகராதியில் ஒரே கருத்துத்தான் என்றாலும், அவற்றின் பயன்பாட்டில் இரண்டிற்கும் இடையிலான வித்தியாசம் மலையிற்கும் மடுவிற்கும் இடையிலானது போலத்தான். தொட்டதுக்கும் Sorry கேக்கிற ரொம்பப்பேர் மன்னிப்பு எங்கிறத பாவிக்க மாட்டாங்க. அதேபோல சிறிய தவறுகளுக்கு Sorry எதிர்பாக்கிறவங்க, கொஞ்சம் பெரிய தவறுகள் என்றால் மன்னிப்பு எண்டு தமிழ்ழ சொல்லவேணும் எண்டு எதிர்பாப்பாங்க. அதோட Sorry சொல்லுறவங்களும் மன்னிப்புக் கேக்கப் பின்னிப்பாங்க. சில தமிழ்ப் படங்கள்ள கூட Sorry சொன்னால் ‘ தமிழ், தமிழ்… மன்னிப்பு’ எண்ட வசனத்தைக் காணலாம். இதனாலயோ என்னவோ, தடைமுறை வாழ்க்கையிலயும் மன்னிப்பு எண்டுறது கொஞ்சம்/ ரொம்பவே மரியாதைக் குறைவாப் பாக்கப்படுது.


இதுக்கு அடிப்படைக் காரணமா நான் நினைக்கிறது என்னண்ணா ஆங்கில மொழி பாவிக்கிறது கொஞ்சம் மரியாதையா நினைக்கிறதுதான். அதோட இன்னுமொரு முக்கியமான காரணமும் இருக்கு. அது ஆங்கில மொழியில அடிப்படையா இருக்கிற மரியாதைத் தன்மைதான். ஆங்கிலத்துல கெட்ட வார்த்தைகள் இருக்கிறதுதான். எங்கள்ள ரொம்பப்பேர் அதுகள மட்டும்தான் தெரிஞ்சு வச்சிட்டு வார்த்தைக்கு வார்த்தை யூஸ் பண்ணிட்டுத் திரியிறாங்கதான். ஆங்கிலப் படங்கள் சிலதிலயும் அடிக்கடி பாவிக்கப்படுதுதான். ஆனா இது எல்லாத்தயும் தாண்டி ஆங்கிலத்தில ஒரு மரியாதையான அடிப்படை இருக்கு.

சாதாரணமா பேசுற ஆங்கிலத்தில கூட மரியாதை கலந்திருக்கும். எங்கட ‘வாடா’ விற்கும், ‘வாங்கோ’ விற்கும் இடையில இருக்கிற வித்தியாசம் ஆங்கிலத்தில கிடையாது. “Come” மட்டும்தான். அதோட எங்கட தமிழ் மொழியில நாங்க அதிகாரம் செலுத்துற மாதிரியான ஒரு பேச்சு முறையைப் பாவிப்பம். ஆனா ஆங்கிலத்துல அடுத்தவரிடம் பணிந்து கேட்கிறது போலத்தான் பேசுவாங்கள். அதோட அவங்கள் தொழில் முறையால வாற ஏற்ற இறக்கங்களப் பாக்க மாட்டாங்க. ஆசிரியரைக்கூட மாணவர்கள் மரியாதைக் குறிகளோட சேர்த்துப் பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள். அவர்கள் வெறும் உதட்டளவு மரியாதையை எதிர்பார்ப்பதில்லை.

அப்படியே அவங்க தாங்க விடுற சின்னத் தவறா இருந்தாலும் சரி, இல்லை பெரிய தவறா இருந்தாலும் சரி, Sorry சொல்லிடுவாங்க. அவங்க அப்படிப் பாவிக்கிறதால Sorry எண்டுற வார்த்தை எங்கட மனசுல ஒரு சாதாரணமான வார்த்தையாப் பதிஞ்சுபொச்சு. ஆனா, நாங்க தமிழ்ழ மன்னிப்புங்கிற வார்த்தைய அவ்வளவாப் பாவிக்கிறதில்லை. அதோட எங்கட பழக்கமுறை தேவையில்லாத மரியாதைகளையெல்லாம் எதிர்பார்க்கிற ஒன்று. அதனால சாதாரணமாப் பேசுறப்ப கூட அதை எதிர்பாக்குற பழக்கம் இருக்கும். அதனாலதான் தேவையில்லாத பிரச்சினைகளும் ஏற்படுது.

செய்த தவறுக்கு எந்த மொழியில வருத்தம் தெரிவிச்சாத்தான் என்ன? வெள்ளைக்காரன்ட நடை, உடை, கலாச்சாரம் எல்லாத்தயும் கண்ணை மூடிட்டுக் கொப்பி அடிக்கிற நாங்க, அவங்க பேச்சில இருக்கிற நல்ல விசயங்களையும் கொஞ்சம் எடுத்துக்கலாமே!!!

Monday, February 23, 2009

ஆஸ்கரை வென்றார் ரஹ்மான்; சந்தோசங்கள் சில, சங்கடங்கள் சில!

11 comments





சினிமா உலகில் அதியுயர் விருதான, அனைவராலும் எதிர்பார்க்கப்படும்ஆஸ்கர் விருது, இம்முறை எமக்கெல்லாம் மேலும் ஒரு விசேசமாக A. R. ரஹ்மானும் போட்டியில், அதுவும் முன்னணியில் இருந்ததால் எம்மவர்மத்தியில் பரபரப்புக் கூடிவிட்டது. ஒன்றல்ல, இரண்டு விருதுகளைத்தட்டிச்சென்று விட்டார்.

A. R. ரஹ்மான் ஒரு தமிழர் என்பதே எம்மையெல்லாம் பெருமைகொள்ளச்செய்கின்ற ஒரு விசயம். அவர் முதன்முதல் அறிமுகமானது ஒருதமிழ்ப் படத்தில். இதைவிட வேறென்ன வேண்டும் நமக்கு, பெருமைப்பட? அதுவும் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ எனத் தமிழிலே கூறி விருதைப்பெற்றுக் கொண்டபோது தமிழர்கள் அனைவருக்கும் நிச்சயமாகப்புல்லரித்திருக்கும். ஆங்கில மேடையில் ஒலித்த இன்னுமொரு தமிழ்க்குரல். நடிகர் கமல்ஹாசன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார், ஆஸ்கர் விருது ஒருஅமெரிக்கத்தரம் என்று. அந்த அமெரிக்கத்தரத்தையே அடைந்துவிட்டார் ஒருதமிழர்! நிச்சயமாக நாமெல்லாம் பெருமைப்பட வேண்டிய விடயம்தான்.

என்னைப் பொறுத்தவரை நான் A. R. ரஹ்மானின் ஒரு வெறியன் என்றேசொல்லலாம். அவர் இசையமைத்த அத்தனை தமிழ்ப் பாடல்களையும் சேமித்துவைத்துள்ளேன். ஏழு கழுதை வயதாகியும் இன்னும் அவரது பாடல்கள்தான்எனக்குத் தாலாட்டு. அவரது மெல்லிய இசை இழையோடும் மெலடிப்பாடல்களாக இருந்தாலும் சரி, இல்லை சிவமணியின் ட்றம் இசை அதிரும்அதிரடியான பாடல்களாக இருந்தாலும் சரி, அத்தனையும் ரசிக்கலாம். உண்மையான திறமைக்கு மதிப்பு எப்போதும் உண்டு என இந்தவிருதின்மூலம் உணர்த்திவிட்டார்.


மறுபுறம் பார்த்தால், A. R. ரஹ்மான் வேறு மொழிகளில் பிரபலமாகத்தொடங்கியபின் அவர் இசையமைக்கும் தமிழ்ப் படங்கள் குறையத் தொடங்கின. அவர் முக்கியமாக ஹிந்திப் படங்களில் தனது கவனத்தைச் செலுத்தியதால்அண்மைக் காலங்களில் வருடத்திற்கு ஓரிரு தமிழ்ப் படங்கள் மட்டுமே இவரதுஇசையில் வெளியாகி வந்தது.

இப்போது ஆஸ்கரும் கிடைத்துவிட்டது. இந்த விருதானது Holliwood உலகின்கதவுகளை அவருக்கு அகலத் திறந்து விட்டிருக்கும். இனி அத்திபூத்தாற்போல்தான் அவரது தமிழ்ப் படங்கள் இருக்கும். அவரோ இனி உலகசினிமாவின் சொத்து. அவருக்கு டாலர்கள்தான் இனி உழைப்பு. உலகத்தவருக்கு எல்லாம் இனி அவர் பெயரால் ஆங்கில இசை மழை பொழியப்போகிறது. ஆனால் தமிழ்? அவ்வப்போது எட்டிப்பார்க்கும்.

அவரது ரசிகர்களான நாமெல்லாம் இனி அவரது தமிழ் இசைக்காகத் தவம் கிடக்கவேண்டியதுதான். ஆங்கிலப் படங்களின் முடிவில் எழுத்துக்களின் ஓட்டத்தில், ஏதாவது ஒரு வரியில், கறுப்புப் பின்னணியில், வெள்ளை எழுத்தில் இருக்கும்அவரது பெயருக்குக் கைதட்டி, விசில் அடித்துப் பெருமைப் பட்டுக்கொள்ளவேண்டியதுதான். நானும் இனி ஆங்கிலத் தாலாட்டுக் கேட்கப் பழகிக்கொள்ளவேண்டியதுதான். என்னதான் நடந்தாலும் அவர் எம்மவர். காத்திருப்போம், எப்போதாவது வரும் அவரது தமிழ்ப் படத்திற்காக!

Sunday, February 22, 2009

சிங்கள பைலாவும், சிகிரிய ஓவியமும்!

3 comments


நேற்று சனிக்கிழமை எனக்கு ஒரு மறக்கமுடியாத நாள். எனது கம்பஸ்சில் Electrical Engineering படிக்கும் அனைவரும் சேர்ந்து சென்ற சுற்றுலா அந்த நாளை அப்படி மாற்றிவிட்டது. நேற்று அதிகாலை 4.30 மணிக்குப் புறப்பட ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்ததாலும், எனது வீடு கம்பஸ்சிலிருந்து தொலைவில் இருந்ததாலும் முதன்நாள் வெள்ளிக்கிழமை இரவு எனது சிங்கள நண்பர்களோடு தங்கவேண்டி ஏற்பட்டது. அன்றுதான் கொழும்பின்மீது விமானக் குண்டுவீச்சு நடாத்தப்பட்டது. முதலில் குண்டுவீசப் பட்டதாக செய்தி வெளியானபோது அவர்கள் என்னை முறைக்கவும் இல்லை, பின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டபோது என்னை ஏழனமாகப் பார்த்துச் சிரிக்கவும் இல்லை. நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது.


திட்டமிட்டபடி அதிகாலை 4.30 மணிக்குப் புறப்பட்டோம். பஸ்சில் கும்மாளத்திற்குக் குறைவில்லை. அவர்களின் பைலா இசையுடனான சிங்களப் பாடல்களைப் பாடிக்கொண்டு வந்தார்கள். அவற்றை trip களில் கண்டிப்பாக ரசிக்க முடியும். தமிழ்ப் பாடல்களைப் பாடும் பொறுப்பு என்னுடையது. எனது அறிவிற்கு ஒருசில பைலா இசையுடன் பாடக்கூடிய தமிழ்ப் பாடல்களே நினைவிற்கு வந்தன. அதனால் வேறு வழியில்லாமல் எனக்குத் தெரிந்த தமிழ்ப் பாடல்களை பைலா இசைக்கு இசைக்கலவை செய்து பாடவேண்டி ஏற்பட்டது. தமிழ் இசையமைப்பாளர்கள் மன்னிப்பார்களாக.

காலை உணவிற்காக ஒரு நண்பனின் விட்டில் இறங்கினோம். அதத வீடு எனச் சொல்வதை விட ஒரு காடு எனச் சொல்லலாம். வீட்டைச்சுற்றி ஒரே மரங்கள். அத்தனையும் பயன்தரு மரங்கள். தனது வீட்டில் இல்லாத, இலங்கைப் பழ மரமு ஒன்றைச் சொல்லும்படி சவால் விட்டான். கொஞ்சம் கஸ்டம்தான். அங்கே மரத்திற்கு மேலும் ஒரு மர வீட்டை அமைத்திருந்தார்கள். அருமையாக இருந்தது.


அங்கிருந்து புறப்பட்டு நண்பகல் 1 மணியளவில் சிகிரியாவைச் சென்றடைந்தோம். அங்கே மதிய உணவை முடித்துவிட்டு, மலை ஏறத் தயாரானோம். மலை அடிவாரத்துக்குச் செல்ல ஏறத்தாழ 1 Km தூரம் நடந்து செல்ல வேண்டும். இருபுறமும் அடர்காடு. மலை அடிவாரத்திற்குச் செல்வதற்கு பிரவேசக் கட்டணத்தைச் செலுத்திவிட்டு அகழிகளைக் கடந்து உள்ளே நுளைகிறோம் 9. அது சிகிரியாவை ஆண்ட காசியப்ப மன்னனின்(அந்தக் காலத்தில் இந்த அகழியைக் கடக்கத்தான் எத்தனை போர்கள்?) அரண்மனைத்தோட்டம். சிதைந்துகிடந்த அக் கட்டடங்களைக் கடந்து மலையில் ஏறத் தயாரானோம். அது படுத்திருக்கும் சிங்கத்தின் வடிவிலான மலை. சிங்கத்தின் கால்களிற்கிடையாற் செல்லும் படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கினோம். அங்கே குளவிகளின் தொல்லை அதிகம். ஒலியெழுப்பல் குளவிகளைச் சீண்டிவிடும் என்ற வாசகம் ஆங்காங்கே கணப்படுகின்றது. ஆளுயரக் குளவிக் கூட்டைப் பார்த்த நான் கொஞ்சம் ஆடித்தான் போனேன்.




மேலே ஏறிச்சென்று பாடப்புத்தகங்களில் மட்டுமே நான் பார்த்த சிகிரிய ஓவியங்களை நேரில் பார்த்தேன். படித்த காலத்தில் அவை மீது ஒரு ஈர்ப்பு எனக்கு இருந்தது. பின் லியனாடோ டாவின்சியின்லெடாபோன்ற ஓவியங்களைப் பார்த்த பிறகு அது குறைந்துவிட்டது. படத்தைப் பார்த்து ஏதாவது புரிந்துகொள்ளுங்கள்.





பின் மலை உச்சியைச் சென்றடைந்தோம். அங்கேதான் காசியப்ப மன்னனின் அரண்மனை இருந்ததாம். இப்போது சிதைவுகள் மட்டுமே எஞ்சிக் கிடக்கின்றன. அந்தக் கால அரன்மனைப் பெண்கள் குளிக்கும் தடாகம் அப்படியே இருக்கின்றது. அங்கிருந்த காசியப்ப மன்னனின் அரியாசனத்தில் அமர்ந்த போது…… ….. ஒரு மன்னனின் பெருமிதம் என்னிடம்.





மலையாலே இறங்கி அடுத்ததாக தம்புள்ள விகாரையைச் சென்றடைந்தோம். மலையைக் குடைந்து விகாரை அமைத்திருந்தார்கள். ஆனால் அதை அடைய சிறிது தூரம் மலையில் ஏறித்தான் செல்ல வேண்டும். போகும் வழியில் குரங்குகளின் தொல்லை அதிகம். போவோர் வருவோர் கொண்டுவரும் பூக்களைப் பறிப்பதுதான் அவற்றின் பொழுதுபோக்கு.







அந்த விகாரையின் நடுவில் ஒரு பாத்திரம். அதில் மலை இடுக்குகளினூடு கசிந்துவரும் நீர் சொட்டிக்கொண்டு இருக்கிறது. வருடம் முழுவதும் அது மாறா வீதத்தில் சொட்டுமாம். எல்லாம் அதிசயம்தான்.













அங்கிருந்து இறங்கிவரும்போது இலங்கையின் பெரிய சமாதிநிலைப் புத்தர் சிலையையும் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. Golden Temple என அது இருக்கும் விகாரை அழைக்கப்படுகிறது. அந்தப் புத்தர்சிலை, தாதுகோபம் என்பன தங்க நிறத்தில் மின்னுகின்றன.









அங்கிருந்து புறப்படும்போது நன்றாக இருட்டிவிட்டது. இரவு 10 மணியளவில் இரவு உணவிற்காக பஸ்சை நிறுத்தியபோது, இறங்கி வீதியோரத்தில் போட்டோம் ஒரு இசைநடனக் கச்சேரி, அந்த இரவில் அயலில் இருந்தோருக்கு நான் கடவுள் படத்தில் ஆர்யா இரவில் உடுக்கை அடித்த அதே Effect ஏற்பட்டிருக்கும். இரவு உணவை அருகிலிருந்த கடையில் முடித்துவிட்டு, இரவு 12.30 மணியளவில் வந்து சேர்ந்தோம். அந்த 20 மணி நேரமும் அனைவரும் புறப்படும் போதிருந்த அதே உற்சாகத்தோடும், பாட்டுக்களோடும் பயணித்தது அருமை, மறக்கவே முடியாதது!.

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy