Wednesday, April 28, 2010

மொழிபெயர்க்கப்பட்ட மௌனம்

10 comments

24042010149-8x6 
யாழ் மருத்துவபீட மாணவன் வேல். சாரங்கன் எழுதிய ‘மொழிபெயர்க்கப்பட்ட மௌனம்’ கவிதைத்தொகுப்பைப்பற்றி பதிவர் பாலவாசகன் தொலைபேசியில் குறிப்பிட்டபோதும்சரி, பின்னர் நேரில் சந்திக்கும்போது படித்துப்பார்க்கும்படி அந்நூலை எனக்குக் கொடுத்தபோதும்சரி அதன்பால் எனக்குப் பெரிதாக ஈர்ப்பு இருக்கவில்லை. படிப்பதற்காக எழுமாற்றாக ஒரு பக்கத்தைத் திறந்து படிக்கத் தொடங்கியபோதுதான் முகத்தில் அறைந்தாற்போல் இருந்தது. ஒரே மூச்சாக அத்தனை கவிதைகளையும் வாசித்துமுடித்துவிட்டுத்தான் புத்தகத்தை மூடமுடிந்தது.
 
வேல். சாரங்கன், என்னைவிட இரண்டொரு வயது அதிகமிருக்கலாம். இருவரும் பிறந்து, வளர்ந்த தூரமும் அதிகமல்ல. அதனால்தானோ என்னவோ, அவர் கவிதைகளில் வாழ்ந்திருக்கும் வாழ்க்கை என்னுடையது போன்ற உணர்வு. அவர் கவிதைகளாய் மொழிபெயர்த்திருக்கும் மௌனம், என்னுள்ளும் இருக்கும் மௌனம். நான் பேசமறந்த, அல்லது பேசப்பயந்த மௌனம். ஒவ்வொரு கவிதையும் என்னுள் ஒரு உணர்வுகளை விட்டுச்செல்கின்றன, அல்லது தட்டிச்செல்கின்றன. பல இடங்களில் தலை என்னையும் அறியாமல் ஆமோதிக்கின்றது.

மனிதங்கள்
மரணித்து விட்ட
மண்ணில்
கவிதைகளுக்கு என்ன
கடமை..?

கவிஞர்களே ..!
கடதாசிகளை கொடுங்கள்
முடிந்தால் இவர்களின்
வயிற்றை நிரப்பட்டும்
இல்லயேல்
கண்ணீரையாவது துடைக்கட்டும்..!

முகத்தில் அறைகிறதா? இதோ இன்னுமொன்று

அம்மா பொட்டிழந்து,
அக்கா கற்பிழந்து,
அண்ணா காலிழந்து,
தாய்வயிற்றில்
கருக்கொண்ட
உருவினை
வெறுப்புடன்
எதிர்பார்த்திருந்த
பொழுதுகளில்…
 
குவித்த மண்ணில்
தலைவைத்து
குறையாய் உறங்கிய
பொழுதுகளில்…

என்று ஒவ்வொரு தருணங்களையும் அடுக்கிவருபவர், இறுதியில் கேட்கிறார்

எப்படி சொல்வது இத்தனை நீளமாய் ..?
தலைநகரில்,
அடையாள அட்டையை புரட்டியபடி
ஒற்றை வார்த்தையில் கேட்கிறாய் சோதரா
பிறந்த இடம்…?

நம்மில் பலரும் உணர்ந்த வலிதான் இது. இவை மட்டுமல்ல, நம் காதலும், விளையாட்டுக்களும்கூட இறைந்துகிடக்கிறது கவிதைகளாய்.

மார்களி விடுமுறையில் பட்டம் ஏற்றிவிட்டுவருவதும், அதன்பின் தொடரும் “விடிஞ்சாப் பொழுதுபட்டாப் பட்டம்தான் இவனுக்கு. பட்டத்தை அண்ணாந்து பாத்து முகமெல்லாம் கறுத்துப்போச்சு” என்ற அம்மாவின் அதட்டலும் ஞாபகம் வருகிறது இவரது பட்டம் – விடுகதை…! என்ற கவிதையைப் படிக்கையில்

பாட்டின் அடியினிலே, ஒரு
பல்லவி சரணத்தின் முடிவினிலே
ஏற்றம் இறக்கமுடன் குரல்
கூட்டி இசை தரும் பாடகன்போல்
கூவிப் பறந்திருந்தாய் – அந்த
கூவல் எனக்கென நான் நினைத்திருந்தேன்…!

காற்றின் மிடுக்கினிலே – பல
நாள்கள் பறந்து பழகியதால்
காணும் என உணர்ந்தோ, பட்டம்
கயிற்றை அறுத்து விழுந்ததுகாண்..!!
சேற்று வயல் புறத்தே – நல்ல
நாற்று நடவந்த ஓர்மனிதன்
தோளில விழுந்தது போய்
அதைத் தூக்கி எடுத்தவன் முன் நகர்ந்தான்..!

இப்படியாக நான் அனுபவித்து உணர்ந்த பல பொழுதுகள் கவிதைகளாய்க் காணும்போது பிடித்துவிடுகிறது. முத்தாய்ப்பாக ஒரு கவிதை முழுவதுமாய்

உடைமைகளோடு…

குஞ்சுக்குடிசை…
கூரை செல்லரித்து,
நீலம் தெரியும்..;
நீர்சேரும், மாரியில்..!

பட்ட கதிகால்; சில
பழைய துருப்பேணிகள்…
ஊசித்துளைகளினால்
உருக்குலைந்த பழம்பானை…

போனமுறை ஓடித்
திரும்புகையில்,
தெருவிலெடுத்த
‘பச்சைப் பெட்டி’ நிறைய, கிளிஞ்ச
பழஞ்சேலைகள்…

வாலை ஆட்டியபடி ஒரு
குட்டி நாய்…!

பல்விழுந்த வாயின் புறுபுறுப்பு..
“நான் சேர்த்ததுகள்..,
விட்டிட்டுப் போகேலா…,
வாறது வரட்டும்”!!
 

வேல் சாரங்கனின் மொழி பெயர்க்கப்பட்ட மௌனம் கவிதை நூலை பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி இலக்கங்கள்.

கொழும்பு-  0777537930.
யாழ்ப்பாணம் - 0779779769
கண்டி - 0779697270.

புத்தகம் கிடைக்கும் இடங்கள்
கொழும்பு -
1.Poobalasingam bk depot, 309A 2/3 Gale rd,welawta.
2. Kokilam bk shp, 4c-5 fussels lane,welawata.
3. Cordova bk shp. 226, gale rd.welawta.
யாழ்ப்பாணம்-
1.poobalasingam.
2.book lab(ramanathan rd)

Monday, April 5, 2010

பையா!

15 comments

paiyamovie080310_28
படத்தைப்பற்றிக் கேள்விப்பட்டவுடனேயே என்னைக் கவர்ந்த விடயம் படத்திலிருந்த கார்ப்பயணம். வேகமான பைக் பயணங்கள் எப்போதும் என் ஃபேவரிட்.  அந்த ஒரே விடயம்தான் அங்காடித்தெரு படத்தைத் தவிர்த்து, பையாவைப் பார்க்கத் தூண்டியிருந்தது.

படத்தின் கதையை ஒரேவரியில் சொல்லச்சொன்னால் அதே தமிழ்ப்படம்தான். நாயகன் பெயர்கூட சிவா. இருந்தும் படமாக்கப்பட்ட விதமும், படத்தின் வேகமும், நாயகன், நாயகி, மற்றும் அந்தக் கார் மூன்றையும் வைத்தே அலுக்காமல் பெரும்பாலான காட்சிகளை நகர்த்திச்சென்ற விதமும் அருமை.

திரையில் இதுவரை பார்த்திராத கதாபாத்திரம் கார்த்திக்கு. அழகாகத் தெரிகிறார். கண்களில் காதலும், மெல்லிய குறும்புச் சிரிப்புமாக அவர் கார் ஓட்டிச் செல்லும் காட்சிகளில் ரசிக்கவைக்கின்றார். தன் காதலை காதலியிடம் வெளிக்காட்டிக்கொள்ளாமல் தனக்குள் கிடந்து உருகுவதும், நண்பர்களுக்கு ஃபோன் செய்து ஒவ்வொரு கணத்தையும் வர்ணிப்பதும் யதார்த்தம். சில காட்சிகளில் சூர்யாவை நினைவுபடுத்தினாலும், எனக்கென்னவோ இப்படியேபோனால் இன்னும் இரண்டொரு படங்களில் சூர்யாவைவிட எனக்கு அதிகம் பிடித்துவிடுவார்போல் தெரிகிறது, க்ரேட்!

காரின் பின்சீட்டில் உட்கார்ந்திருக்கும் வேலைதான் என்றாலும், தன் பாத்திரத்துக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார் தமன்னா. முக்கியமாக பாடல்காட்சிகளில் பார்த்துக்கொண்டிருக்கலாம்போல் இருக்கிறது.
 Tamanna-and-Karthi-in-Paiya-1
ஒளிப்பதிவு – கலக்கல். புழுதிக் காட்டில் சீறிப்பாயும் கார் சேசிங்கும், பாடல் காட்சிகளும் இப்போதும் கண்ணுக்குள் நிற்கின்றன. முக்கியமாக சுத்துதே சுத்துதே பூமி பாடலில் பௌர்ணமி இரவு வெளிச்சமும், கிளம்பிப் பறக்கும் மின்மினிப்பூச்சிகளும் வாவ்! தேங்ஸ் டு மதி!!

இசை – சான்சே இல்லை. பாடல்கள் ஏற்கனவே பிடித்துப்போய்விட்டன. பின்னணி இசையும் துள்ளி விளையாடுகிறது. முக்கியமாக கார்த்தி தமன்னாவை விட்டுவிட்டு தனியாகத் திரும்பும் காட்சியின் இசையும், அப்போது வரும் சோகப்பாடலும் க்ரேட். தியேட்டரிலிருந்து வந்ததுமுதல் ஹம் பண்ணிக்கொண்டேயிருக்கிறேன் – துளித்துளித்துளி மழையாய் வந்தாளே…..

கமர்ஷியல் படங்களுக்கேயுரிய அதே முடிவளர்த்த வில்லன் கூட்டம், அதே ஃபைட், அதே ஹீரோயிசம், அதே லாஜிக் மீறல்கள் எல்லாவற்றையும்தாண்டி ரசிக்கவைக்கின்றது அந்தக் கருப்புக் காரும், அதன் வேகமும்.

பையா – பார்க்கலாம்யா!

Saturday, April 3, 2010

அரசியலில் பதிவர்கள்???

56 comments

 

 

வரப்போகும் இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலையொட்டி சில பதிவர்கள் அரசியலில் இறங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்தன. இது தொடர்பான மேலதிக தகவல்களைப்பெற எமது உளவுப்பிரிவை உசுப்பிவிட்டதால் கிடைத்த பதிவர்களின் பதாகைகள் சில...

 

Vanthi 

 Athirai 

Mathu

 

Varo 

Kangon 

Yoga    

   Bavan

 Bullet

 Atchu 

Sathish 

Vasakan 

Loshan

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy