Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Saturday, July 23, 2011

நிலா..!!!

12 comments

 

குழந்தைகளின் உலகுக்குள்

அனுமதிக்கப்படாத அந்நியர்கள்

தங்களை பெரிய மனிதர்களாக

எண்ணிக்கொள்வது பிழையல்ல

பேதமை!

காலையில் விகடனில் படித்துவிட்டு ‘அட!’ போடவைத்த இந்த வரிகள் மாலை தெய்வத்திருமகள் திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளின் உலகத்தைப் பார்த்தபோது அப்படியே மனதில் ஆழப் பதிந்துபோனது.

Vikram, Baby Sara in Deiva Thirumagan

கிருஷ்ணா – நிலா என்ற இரண்டு குழந்தைகளின் உலகம். இந்தக் குழந்தைகளின் குடும்பத்தின் ஐந்து வயதுக் குட்டி ஏஞ்சல் நிலாவாக பேபி சாரா. அவருக்குத் தகப்பனாக, தாயாக ஏன் சமயத்தில் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளும் இன்னுமொரு குழந்தையாக ஒரு மனநிலை குன்றியவரின் பாத்திரத்தில் சற்றும் அலட்டலில்லாமல் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் விக்ரம். இந்த இருவருக்கும் இடையிலான விளையாட்டு, குறும்பு, பாசம், பிரிவு, ஏக்கம், ஏமாற்றம், கோபம் இதுதான் தெய்வத் திருமகள்.

கலகலப்பாக ஆரம்பித்து நகர்ந்துகொண்டிருக்கும் படத்தில் சிரித்துச் சிரித்து கண்ணில் வந்த கண்ணீர் காயுமுன்னரேயே மகளைப் பிரிந்து கிருஷ்ணா கதறும் காட்சி உறையவைக்க உணர்வுகளின் கலவையாக, ஒன்றுக்கொன்று முரணான உணர்வுகளை ஒரே நேரத்தில் முழுமையாக உணரவைக்க முடியுமா என்ற கேள்விக்கு ஆம் என்று அடித்துச்சொல்லியிருக்கிறது தெய்வத்திருமகள்.

படத்தில் இசையே பேசப்படாத பல வசனங்களைப் பேசிவிட, பல இடங்களில் பாத்திரங்களது மௌனமும் உடல் மொழிகளுமே புரிந்துகொள்வதற்குப் போதுமானதாக இருக்கின்றன. குறிப்பாக இறுதிக் காட்சிகளில் இசை காதுகளில் நுளைந்து மனதைக் கட்டிப்போட்டு விடுகின்றன. சரியான பாத்திரத் தெரிவுகள், அலட்டலில்லாத நடிப்பு, மனதைக் கவரும் இசை என்று எல்லாவற்றையும் தாண்டி படம் முடிந்து பல மணி நேரம் ஆகியும் இன்னும் மனதுக்குள் நிற்பது – நிலா!

sara-11

அடர்ந்த புருவங்கள், கதை பேசும் கண்கள், மெல்லிய புன்னகை என்று ஒருமுறை பார்த்தாலே மனதோடு ஒட்டிக்கொள்ளும் அந்தச் சின்ன முகமே படத்தின் பாதி இடங்களில் நடித்துவிடுகிறது. பாடசாலைக்கு வரும் தகப்பனிடம் சைகை மொழியில் உரையாடி வீட்டுக்குப் போகுமாறு கையெடுத்த்துக் கும்பிடுவதாகட்டும், இடிக்குப் பயந்து இருவரும் ஒடுங்கிக் கிடந்துவிட்டு கைகளில் தண்ணீர் ஏந்தி விளையாடுவதாகட்டும், தகப்பனைப் பிரிந்து ஏங்கும் காட்சிகளாகட்டும், இறுதி நேர நீதிமன்றக் காட்சியில் தகப்பனும் மகளுமாக சைகைகளிலேயே கோபித்துக்கொள்வதும் பின் சமாதானமாகி கதைபேசி உரையாடுவதும் அன்பைப் பரிமாறுவதும் என ஒவ்வொரு காட்சிகளுமே ஒவ்வோர் வார்த்தையில்லாக் கவிதைகள். மழலைக் குரலும், காட்சிக்கேற்ப மாறிமாறிக் கதைபேசும் கண்களுமாக அந்தக் குட்டி ஏஞ்சலுக்கு ஐந்து வயதுதான் என்றால் சத்தியமாக நம்ப முடியவில்லை. காட்சிக்குக் காட்சி பாசம், பிரிவு, ஏக்கம், வேதனை என்று மாறி மாறிக் காட்டி இந்தச் சின்ன வயதில் இத்தனை திறமைகளா? வீட்டுக்குப் போய் முதலில் திருஷ்டி சுற்றிப் போடச் சொல்லவேண்டும்.

ஒவ்வ்வொருவருக்கும் தனது மகள் எப்படி இருக்கவேண்டும் என்ற கற்பனையின் உருவம்தான் நிலா. தெய்வத் திருமகள் என்ற பெயர் மாற்றம் மிகப் பொருத்தமானதுதான். இப்படி ஒரு குட்டி தேவதை இறைவனின் சொந்தக் குழந்தையைத் தவிர யாராக இருக்கமுடியும்?

படம் I AM SAM என்ற ஆங்கலப் படத்தின் தழுவலாம். இருந்துவிட்டுப் போகட்டுமே. தழுவலைத் தாண்டி படத்தில் எவ்வளவோ இருக்கும்போது தழுவலாக இருந்தாலும் தவறேதும் இல்லையே.

குட்டி நிலாவின் பாசப் போராட்டம் முடிந்து வெளியேறும்போது அடர்ந்த மௌனம், கனத்த மனத்துடன் கொஞ்சம் கண்ணீரையும் சேர்த்தே தந்துவிடுகிறது தெய்வத்திருமகள்.

Thursday, December 23, 2010

மன்மதன் அம்பு

13 comments

 

Manmadhan Ambu

கமல், கே. எஸ். ரவிக்குமார் இணைப்பில் வந்திருக்கும் கமலின் இன்னுமொரு ராக்கெட் மன்மதன் அம்பு. கமலின் கலகல + விறுவிறுப்பான திரைக்கதையில், அவரது பாணி அலட்டலில்லாத நடிப்பில் இறுதிவரை கட்டிப்போட்டுவிடுகிறது மன்மதன் அம்பு.

பிரபல தொழிலதிபர் மதனகோபாலாக வரும் மாதவனும், சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் த்ரிஷாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றார்கள். சூர்யாவுடனான சூட்டிங்கின்போது த்ரிஷாவிற்கு புதிதாக வாங்கிய காரை பரிசளிக்க வரும் மாதவனும் அவரது தாயார் உஷா உதூப்பும் சூட்டிங் பார்ப்பதற்காக இருந்துவிட அங்கு நடக்கும் சில சம்பவங்கள் த்ரிஷாமீது மாதவனுக்கு சந்தேகத்தைக் கிளறிவிட்டுவிட இருவருக்கும் வாக்குவாதம் முற்றிவிடுகிறது. இந்த நிலையில் விடுமுறைக்காக பாரீஸ் செல்லும் த்ரிஷாவைக் கண்காணிக்க கமலை நியமிக்கிறார் மாதவன். அங்கு இடம்பெறும் திடீர் திருப்பங்களும், கதையோடு ஒட்டிய நகைச்சுவையும் திரையில் பார்க்கப்படவேண்டியவை.

manmadhan_ambu_movie_pictures_10

முறுக்குமீசையும், மூன்றுநாள் தாடியுமாக இந்திய இராணுவ கமான்டோ மேஜர் ராஜா மன்னாராக வருகிறார் கமல். காதல் மனைவியை விபத்தில் பலிகொடுத்துவிட்டு பஞ்சதந்திரம் நண்பன் ரமேஷ் அரவிந்த்தின் கான்சர் ட்றீட்மென்ட்டுக்காக மாதவன் கொடுக்கப்போகும் பணத்தை எதிர்பார்த்து பாரீசில் அவருக்காக த்ரிஷாவைப் பின்தொடர்ந்து கண்காணிக்கும் பாத்திரத்தில் வருகிறார் கமல். த்ரிஷாவின் பர்சைப் பறிக்கும் கும்பலைத் துரத்திப்பிடிக்கும் சேசிங் காட்சியில், அவரது மனைவியாக வரும் ஜூலியட்டை கடந்தல் கும்பலிடமிருந்து இராணுவ மேஜராக இருந்து காப்பாற்றும் காட்சியில், ‘போனால் போகட்டுன்னு’ பாடலில் ஆடிக்கொண்டே நடக்கும் காட்சியில், மனைவியுடனான ரொமான்டிக் காட்சியில், என்று நடிப்பில் வழமைபோல பட்டையைக் கிளப்பியிருக்கிறார் கமல். திரைக்கதை, வசனங்களிலும் தனித்துத் தெரிகிறார்.

அவரைச்சுற்றியே நடக்கும் கதையைத் தாங்கும் நடிகையின் பாத்திரம் த்ரிஷாவுக்கு. கவிதை, இலக்கியத்தில் ஆர்வமுள்ள ஒருவராக , அம்புஜாஶ்ரீ என்ற பிரபல நடிகையாக வருகிறார் அவர் இம்முறை சொந்தக் குரலில் பேசி அலட்டலில்லாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

த்ரிஷாவைக் காதலிக்கும் சந்தேகப் பேர்வழியாக தொழிலதிபர் மதனகோபாலாக மாதவன். அவருக்கேயுரிய ரொமான்டிக் லுக்குடன் அறிமுகமாகிறார். த்ரிஷாவுடனான ஊடலுக்குப் பிறகு அவரைக் கண்காணிக்க கமலை அனுப்பிவிட்டு அங்கு நடப்பவற்றை தொலைபேசியில் கேட்பதும், எந்நேரமும் நண்பர்களுடன் பாரில் தண்ணீரில் மிதப்பதுவும்தான் அவரது வேலை. க்ளைமார்க்சில் பாரீசிற்கு வந்து காமெடியில் கலக்குகிறார்.

manmadhan_ambu_movie_stills_04

 

பாரீசில் த்ரிஷாவின் பள்ளித்தோழியாக, இரு குழந்தைகளுடன் கணவனைப் பிரிந்துவாழும் கதாபாத்திரத்தில் சங்கீதா கச்சிதமாகப் பொருந்துகிறார். அவரது மகனாக வரும் குட்டி வாலு விஷ்ஷு பண்ணும் ரகளைகளும், பெரியவர்களின் சங்கேதங்களைப் பிடித்துக்கொண்டு அவன் பண்ணும் சேட்டைகளும் படம் முழுவதும் கலகல.

கான்சரில் அவதிப்படும் கமலின் நண்பனின் பாத்திரத்தில் ரமேஷ் அரவிந்த், அவரது மனைவியாக ஊர்வசியும் வந்து போனாலும் ரமேஷ் அரவிந்த்தின் பாத்திரம் இன்னும் மனதிலேயே நிற்கிறது. இவர்களைத்தவிர த்ரிஷாவிடம் கதை சொல்லி கால்சீட் வாங்க அவரைத் துரத்தும் கேரள தயாரிப்பாளர் குஞ்சன் குரூப்பும், அவரது மனைவியும் கதையூடே நகரும் நகைச்சுவைக்கு நன்றாகத் துணைபோயிருக்கிறார்கள். நடிகர் சூர்யாவும் சூர்யாவாகவே வந்துவிட்டுப் போகிறார்.

கமலின் வரிகள் மற்றும் குரலில், தேவி ஶ்ரீ பிரசாத்தின் இசையில் ஏற்கனவே ஹிட்டாகிவிட்ட பாடல்கள் தியேட்டரில் தாளம்போட வைக்கின்றன. இலங்கை இரசிகர்களுக்கு போனஸ் பரிசாக கமலின் ‘கண்ணோடு கண்ணைக் கலந்தாள்’ கவிதையும் நீக்கப்படாமல் அப்படியே இருக்கிறது. புதுமையான ஒரு முயற்சியாக பின்னோக்கிப் பயணிக்கும் ப்ளாஸ்பேக் காட்சியில் வரும் நீலவானம் பாடலும், அதற்கேற்ப சரியான வாயசைப்புகளும் ஆச்சரியப்பட வைக்கின்றன. மனூஸ் நாடனின் ஒளிப்பதிவில் பாரீஸ் நகரமும், சுற்றுலாக் கப்பலும் கண்முன்னே விரிகின்றன.

அருமையான கதைக்களத்தைத் தேர்வுசெய்து, அதற்கு நகைச்சுவை முலாம்பூசி வெளியிடுவதில் வெற்றிகண்டிருக்கிறார்கள் கமலும் கே. எஸ். ரவிக்குமாரும் என்றே சொல்லலாம். ஆங்காங்கே தன் நாத்திகக் கருத்துக்களையும் கமல் விதைத்துச் சென்றிருக்கிறார். படத்தின் மைனசாகச் சொல்லவேண்டுமானால் க்ளைமார்க்சுக்கு முந்தய கொஞ்சம் இழுவையான படகுக் காட்சிகளைச் சொல்லலாம். மற்றபடி அமைதியான முதற்பாதியும், கலகலப்பான இரண்டாம் பாதியுமாக ரசிகர்களுக்கு விருந்தாகிறது மன்மதன் அம்பு.

மன்மதன் அம்பு – கமலின் ராக்கெட்.

Saturday, October 2, 2010

எந்திரன் – குற்றமும் பின்னணியும்

15 comments

 

cbe20_Endhiran-Movie-Aug-Stills-19

“சைன்ஸ்ஃபிக்ஷன் என்னும் அறிவியல் புனைகதையில் இந்த சௌகரியம் முக்கியமானது. விருப்பப்படி எதிர்காலத்தை தேர்ந்தெடுக்கலாம். ஒரே ஒரு தேவை அதன் ஆரம்பங்கள் நிகழ்காலத்தில் இருந்தாகவேண்டும்” - சுஜாதா

மேலைநாட்டுக் இலக்கியங்களிலேயே தாராளமாகக் காணப்பட்ட அறிவியல் புனைகதைகள் (Science fiction) மற்றும் எதிர்காலவியல் சிந்தனைகளுடன் கூடிய கதைகள் (Futurology) என்பவற்றை மேலைநாட்டு வட்டத்தைத்தாண்டி தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் சுஜாதா. அவருக்கு முன்னரும் சில கதைகள் தமிழில் இந்த வட்டத்தைத் தொட முயற்சித்திருந்தாலும், சைன்ஸ்ஃபிக்ஷன் என்று அவற்றை ஏற்றுக்கொள்வது சிரமம்தான்.

இந்த சைன்ஸ்ஃபிக்ஷனை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் ஆங்கிலத்தில் சாதாரணமானவை என்றாலும், தமிழுக்குப் புதிது. இவற்றுக்குப் பின்னாலிருக்கின்ற அதிக பொருட்செலவுதான் இதற்குச் சொல்லப்படுகின்ற பிரதான காரணமாக இருந்தாலும், தமிழ் சினிமாவில் ஓரிரு படங்களுக்குள்ளாகவே நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் குத்தப்பட்டுவிடுகின்ற ‘இமேஜ்’ உம், அதைவிட்டு வெளியே வருவதை அவர்களும், ரசிகர்களும் விரும்பாததும்கூடக் காரணம்தான். இதே காரணத்துக்காகத்தான் எந்திரன் ரஜினி படமா, சங்கர் படமா என்று விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

ரஜினியின் அண்மைக்காலப் படங்களில் ரஜினி என்பதற்கான வரைவிலக்கணத்தை அவர் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துக்கொண்டே வந்திருக்கிறார். சந்திரமுகி, சிவாஜி என்று இப்போது எந்திரனில் சாதாரணமாக நடித்துவிட்டுப் போயிருப்பது பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், வரவேற்கவேண்டிய ஒரு விடயமே. அடுத்ததாக சங்கர். அவரது வழமையான ஊழல் பேயைத் துரத்தும் வேலையையும், நாட்டை மாற்றியமைக்கும் முக்கியமான பொறுப்பையும் புறந்தள்ளிவிட்டு, வித்தியாசமான ஒரு முயற்சியில் வெற்றிபெற்றிருக்கிறார்.

00000667-constrain-160x200 சுஜாதாவின் என் இனிய இயந்திராவையும், மீண்டும் ஜீனோவையும் அடிப்படையாக வைத்துக்கொண்டு, இன்னும் அவற்றில் லாஜிக் அடி வாங்கிய இடங்களையும் மாற்றி எந்திரனில் ரோபோவையும் காதலிக்கவைத்திருக்கிறார். படத்தில் இவரது பல வசனங்கள் நறுக் என்று இறங்குகின்றன. வசனங்களில் தாராளமாகக் கடந்துபோகும் அறிவியல் சங்கதிகள் எல்லாம் உறுத்தாமல் இறங்குகின்றன. இப்படி ஒரு படத்திற்கான கதையை பத்துவருடங்களுக்கு முன்னரேயே எழுதிவிட்டு இறந்துபோயிருக்கிறார். இவர் இல்லாவிட்டால் எந்திரனை தொழில்நுட்பத்தில் அதிகம் லாஜிக் மீறல்கள் இல்லாமல் இப்படி ஒரு பரிமானத்தில் சாத்தியமே இல்லை. எந்திரத்திற்கும் உணர்வுகள் வருகின்றட என்பதை மீண்டும் ஜீனோவில் தொட்டுச்சென்றவர், எந்திரனில் அதைக் காதலிக்கவும் வைத்துவிட்டார். படத்தை குறைந்தபட்சம் அவருக்கு சமர்ப்பணமாவது செய்திருக்கலாம். எல்லாம் பணம் செய்யும் வேலை.

ரஹ்மானின் பின்னணி இசை எங்கேயுமே உறுத்தாமல் படத்தோடு சேர்ந்து ரசிக்கமுடிகிறது. பாடல்கள் தியேட்டரில் கேட்கும்போது அதிகமாக இனிக்கின்றன. குறிப்பாக அரிமா அரிமா ஹெட் செட்டில் கேட்கும்போது இல்லாத ஒரு உணர்வை தியேட்டரில் கொடுத்தது. ஆஸ்கர் பெற்றுக்கொண்டபோது அவர்முன் வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு மீண்டும் ஒருமுறை எந்திரன் மூலம் பதில் சொல்லியிருக்கிறார் ரஹ்மான். கிளிமாஞ்சாரோ பாடல் ஏற்கனவே பிடித்துவிட்டாலும் திரையில் பாடலை ரசிக்கவிடாமல் ஐஸ் ஆக்கிரமித்திருக்கிறார். ஐஸ் படம் முழுவதும் அப்படியேதான் வந்துபோனாலும் க்ளோசப் காட்சிகள் அவருக்கும் வயதாவதைக் காட்டுகின்றன.

Endhiran-Stills-009

படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் க்ளைமாக்சின்போது கொஞ்சம் அதிகமாகவே தெரிந்தாலும், அதன் நுணுக்கங்கள் கச்சிதமாக இருக்கின்றன. படத்தின் ஆரம்பத்தில் சிட்டி ரோபோ தன் எந்திர உடலுடன் முதன்முறையாக ரஜினி ஸ்டைலிலேயே நடந்துவந்து, இடுப்பில் கைவைத்து லுக்குவிடும் காட்சி ஒன்றே போதும், கிராபிக்சின் துல்லியத்தையும், சங்கர் அவற்றைக் கையாண்ட நேர்த்தியையும் சொல்ல.

இந்தப் படத்தில் ரசித்த இன்னுமொரு விடயம், காட்சிகளை பலதரப்பட்ட ரசிகர்களையும் கவரும்படியான காட்சிகள்தான். விஞ்ஞான நுணுக்கங்களைக்கூட போகிறபோக்கில் உறுத்தாமல் சொல்லிவிட்டுச் செல்வது அழகு. படத்தின் ஒன்லைன், பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம், சொல்லப்பட்ட விதம் எல்லாமே தமிழ் சினிமாவிற்குப் புதிது. இதில் உள்ள ஆங்கிலப்படத்தின் தாக்கங்களை தேடித்தேடிப் பலரும் பட்டியலிட்டுக்கொண்டிருக்கலாம். ஆனால் இந்தப்படத்துக்கான சிந்தனை பத்து வருடங்களுக்கு முற்பட்ட ஒன்று, இரண்டாவது இப்படி ஒரு படம் தமிழுக்குப் புதிது. எந்திரன் கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய ஒரு படம். குறை கண்டுபிடிப்பவர்கள் கண்டுபிடித்துக்கொண்டேயிருங்கள். புறக்கணிப்பவர்கள் புறக்கணித்துக்கொண்டேயிருங்கள். உங்களுக்காகவே யாராவது மசாலா அரைத்துக்கொண்டிருப்பார்கள்.

Wednesday, June 16, 2010

முன்வந்த சிம்பு, பின்தங்கிய த்ரிஷா

4 comments

 

AAAAAAA300 (1)

திரையுலகுக்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் 2010 வாக்களிப்புகள் அனல் பறக்க நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நண்பர்களால் ஒன்றுசேர்ந்து ஆரம்பிக்கப்பட்டு பல பதிவர்கள் மற்றும் திரட்டிகளின் ஆதரவோடு நடைபெறும் வாக்களிப்பு வரும் வெள்ளி (18.06.2010) இரவுடன் முடிவடைந்து, முடிவுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படவுள்ளன.

எனவே இதுவரை வாக்களிக்காத, ஆர்வமுள்ளவர்கள் கீழே காணப்படும் சுட்டிக்குச் சென்று வாக்குகளைப் பதிவுசெய்யுங்களேன்

http://tamilcinemavote.blogspot.com/2010/05/awards-2010.html

பி.கு: – தலைப்பு வேறொன்றுமில்லை, தற்போதய நிலவரம்தான் ;)

Saturday, May 1, 2010

சுறா – சூப்பர்ப் படம்பா

33 comments

 

711_20100305_53449400_sura-poster-2

 

இளைய தளபதி விஜய் நடித்து, உலகம் முழுவதும் 600 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சுறா திரைப்படத்தை ஓசி டிக்கெட்டில் பார்க்கும் ஒப்பற்ற வாய்ப்புக் கிடைத்தது. ஆரம்பக் காட்சி முதலே இளைய தளபதி விஜயின் ஆர்ப்பாட்டம்தான். அறிமுகக் காட்சி இதுவரை எந்தப் படத்திலும் இடம்பெறாதது. அதில் இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பியவாறே இளைய தளபதி விஜய் டைவ் அடித்து வரும் காட்சியைப்பார்த்த நீச்சல் உலக சாதனையாளர் மைக்கல் பிலிப்ஸ், இளைய தளபதி விஜயைத் தொடர்புகொண்டு அவ்வகை நீச்சலின் நுட்பங்களைத் தெரிந்துகொண்டதிலிருந்தே அதன் கனதியை அறியமுடியும்.

படத்தில் இளைய தளபதி விஜய் பிறந்து, வளர்ந்து, போராடிக் காப்பாற்றிக்கொண்டிருக்கும் கிராமத்தின் பெயர் யாழ்நகர். இப்படியான ஒரு காவியத்தில் இலங்கைப் பிரச்சினையை இவ்வளவு அருமையாகக் கையாண்டிருப்பது படத்தின் சிறப்புக்கு ஒரு சோறு பதம். யாழ்நகர் குப்பத்தின் குடிசைகள் எல்லாம் வெயில், மழை தாங்கும் கல் வீடுகளாக மாற்றி விட்டு தான் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்துடன் வாழும் இளைய தளபதி விஜய் இனி அந்தக் குப்பத்துக்கு மட்டுமல்ல, இலங்கை இளைய தளபதி விஜய் ரசிகர்கள் அனைவருக்குமே தெய்வம் போலத்தான்.

 vijaynewatmstillsn08-8x6

படத்தின் நாயகி தமன்னா. பாசத்துடன் வளர்த்த நாய் காணாமல் போனதற்காகவே தற்கொலை பண்ண முயற்சிப்பதும், பின்னர் தனது காதலை இளைய தளபதி விஜயிடம் சொல்லாமலேயே, அவர் ஏற்றுக்கொள்ள மாட்டாரோ என்ற பயத்தில் தற்கொலை செய்ய முயற்சிப்பதும் அவரது இளகிய உள்ளத்தினை எடுத்துக்காட்டும் காட்சிகள். இரண்டாம் முறை தற்கொலைக்கு முயற்சிப்பவரை விஜய காப்பாற்றியபின்னர் தனது காதலை இளைய தளபதி விஜயிடம் கூறுகிறார். அப்போது தியேட்டரில் இருந்து இதற்கு தற்கொலையே மேல் என்று யாரோ ஒருவர் கத்தியது சத்தியமாக ரசிக்க முடியாத ஒன்று. இளைய தளபதி விஜயும் தமன்னாவை ஏற்றுக்கொண்டபிறகு வரும் டூயட் பாடல் இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாதவாறு புதுமையாக, காதலைப் பறைசாற்றும் விதமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

காமெடிதான் படத்துக்கே பெரும் ப்ளஸ். ஒரே காட்சியில் வந்துவிட்டுப் போகும் கவுண்டமணி, செந்தில் ஜோடி, படம் முழுவதும் நினைத்து நினைத்துச் சிரிக்குமளவிற்கு காமெடி பண்ணிவிட்டுப் போகிறார்கள். அதற்குமுன் வடிவேலு அடிவாங்கும் காமெடிகளை ரசிக்க முடியவில்லை.

பின்னணி இசை படத்துக்குப் பெரும் பக்கபலம். படத்தில் வரும் பஞ்ச் டயலாக்குகளுக்கெல்லாம் பின்னணி இசையை நிறுத்தி, வசனங்களை செவிமடுக்கவிட்டிருப்பது புதுவகை யுக்தி. ஆனாலும் படத்தில் வரும் பெரும்பாலான கேரக்டர்கள் பஞ்ச் டயலாக்கே பேசிக்கொண்டிருப்பதால் பின்னணி இசை இருக்கும் நிமிடங்கள் மிகக் குறைவாகவே இருப்பது வருத்தம்தான்.

வடிவேலு, இளைய தளபதி விஜய் பேசிக்கொள்ளும் காட்சியினூடு றீமேக் படங்களை கலாய்ப்பது, தொடர்ந்து றீமேக் படங்களையே நம்பிக்கொண்டிருப்போர்க்கு செருப்படி. அத்துடன் படத்தின் பெரும்பாலான பாடல்க்காட்சிகளில் கால்சட்டையுடனேயே வந்துபோகும் தமன்னாவை, தஞ்சாவூரு ஜில்லாக்காரி பாடலில் தமன்னாவின் கால்சட்டையை மட்டும் ஆடவிட்டு விஜய் கலாய்ப்பதும் அழகு. இப்படியான காட்சிகள், தமிழ்ப்படம் போன்ற இன்னுமொரு ஸ்கூப் படம்தான் சுறாவோ போன்ற எண்ணப்ப்பாட்டை ரசிகர்கள்மத்தியில் அவ்வப்போது விதைக்கின்றன.

CS_83_29

குப்பத்துத் திருவிழாவில் இளைய தளபதி விஜயை வெள்ளைக்காரிகளுடன் ஆடவிட்டு, கௌதம் வாசுதேவ் மேனனுக்கு தான் எவ்வகையிலும் சளைத்தவர் இல்லை என்று காட்டியிருக்கும் இயக்குனர் எஸ்.பி.இராஜக்குமார் படத்தில் காட்சிக்குக் காட்சி புதுமைகளுப் புகுத்தி, எதிர்பார்ப்புகளை எகிறவைக்கிறார். கஷ்டம் அதிகாரியாக விஜய் வரும் காட்சியில், அவரை யாராலும் அடையாளமே காணமுடியாதவாறு செய்திருப்பதும், வெறும் பட்டாசுகளைக்கொண்டே, றாக்கெட் லாஞ்சர்களைக் கொண்டு தாக்குவதுபோல வில்லன் கூட்டத்தை நம்பவைப்பதும், பராசக்தி படத்தில் இருந்ததற்கு நிகராக நீதிமன்றில்  இளைய தளபதி விஜய் பேசும் வசனங்களும் இயக்குனரின் திறமைக்கு எடுத்துக்காட்டு.

மொத்தத்தில் சுறா – சூப்பர்ப் படம்பா

Monday, April 5, 2010

பையா!

15 comments

paiyamovie080310_28
படத்தைப்பற்றிக் கேள்விப்பட்டவுடனேயே என்னைக் கவர்ந்த விடயம் படத்திலிருந்த கார்ப்பயணம். வேகமான பைக் பயணங்கள் எப்போதும் என் ஃபேவரிட்.  அந்த ஒரே விடயம்தான் அங்காடித்தெரு படத்தைத் தவிர்த்து, பையாவைப் பார்க்கத் தூண்டியிருந்தது.

படத்தின் கதையை ஒரேவரியில் சொல்லச்சொன்னால் அதே தமிழ்ப்படம்தான். நாயகன் பெயர்கூட சிவா. இருந்தும் படமாக்கப்பட்ட விதமும், படத்தின் வேகமும், நாயகன், நாயகி, மற்றும் அந்தக் கார் மூன்றையும் வைத்தே அலுக்காமல் பெரும்பாலான காட்சிகளை நகர்த்திச்சென்ற விதமும் அருமை.

திரையில் இதுவரை பார்த்திராத கதாபாத்திரம் கார்த்திக்கு. அழகாகத் தெரிகிறார். கண்களில் காதலும், மெல்லிய குறும்புச் சிரிப்புமாக அவர் கார் ஓட்டிச் செல்லும் காட்சிகளில் ரசிக்கவைக்கின்றார். தன் காதலை காதலியிடம் வெளிக்காட்டிக்கொள்ளாமல் தனக்குள் கிடந்து உருகுவதும், நண்பர்களுக்கு ஃபோன் செய்து ஒவ்வொரு கணத்தையும் வர்ணிப்பதும் யதார்த்தம். சில காட்சிகளில் சூர்யாவை நினைவுபடுத்தினாலும், எனக்கென்னவோ இப்படியேபோனால் இன்னும் இரண்டொரு படங்களில் சூர்யாவைவிட எனக்கு அதிகம் பிடித்துவிடுவார்போல் தெரிகிறது, க்ரேட்!

காரின் பின்சீட்டில் உட்கார்ந்திருக்கும் வேலைதான் என்றாலும், தன் பாத்திரத்துக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார் தமன்னா. முக்கியமாக பாடல்காட்சிகளில் பார்த்துக்கொண்டிருக்கலாம்போல் இருக்கிறது.
 Tamanna-and-Karthi-in-Paiya-1
ஒளிப்பதிவு – கலக்கல். புழுதிக் காட்டில் சீறிப்பாயும் கார் சேசிங்கும், பாடல் காட்சிகளும் இப்போதும் கண்ணுக்குள் நிற்கின்றன. முக்கியமாக சுத்துதே சுத்துதே பூமி பாடலில் பௌர்ணமி இரவு வெளிச்சமும், கிளம்பிப் பறக்கும் மின்மினிப்பூச்சிகளும் வாவ்! தேங்ஸ் டு மதி!!

இசை – சான்சே இல்லை. பாடல்கள் ஏற்கனவே பிடித்துப்போய்விட்டன. பின்னணி இசையும் துள்ளி விளையாடுகிறது. முக்கியமாக கார்த்தி தமன்னாவை விட்டுவிட்டு தனியாகத் திரும்பும் காட்சியின் இசையும், அப்போது வரும் சோகப்பாடலும் க்ரேட். தியேட்டரிலிருந்து வந்ததுமுதல் ஹம் பண்ணிக்கொண்டேயிருக்கிறேன் – துளித்துளித்துளி மழையாய் வந்தாளே…..

கமர்ஷியல் படங்களுக்கேயுரிய அதே முடிவளர்த்த வில்லன் கூட்டம், அதே ஃபைட், அதே ஹீரோயிசம், அதே லாஜிக் மீறல்கள் எல்லாவற்றையும்தாண்டி ரசிக்கவைக்கின்றது அந்தக் கருப்புக் காரும், அதன் வேகமும்.

பையா – பார்க்கலாம்யா!

Friday, March 5, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா

29 comments


காதலை தேடிக்கிட்டு போக முடியாது…
அது நிலைக்கணும்… அதுவா நடக்கணும்…
நம்மள போட்டு தாக்கணும்… தலைகீழ போட்டு திருப்பணும்…
எப்பவுமே கூடவே இருக்கணும்…
அதான் ட்ரூ லவ்…
அது எனக்கு நடந்தது!…
 81_thumbzoom
கேரள ஆற்றின் ஓட்டத்தோடு ஆரம்பிக்கும் படம், அதே அருவியின் ஓட்டத்தைப்போலான A. R. ரஹ்மானின் இசையின் பலத்தோடும் அழகான, யதார்த்தமான, எவரையும் உறுத்தாதவிதத்திலான கூடல், ஊடல் காட்சிகளினூடும் ஒரு மென்மையான காதலையும் சொல்லிவிட்டுப் போகிறது.

நீண்டநாட்களுக்குப்பிறகு சிறந்த ஒரு படத்தைப் பார்த்த திருப்தியும், படம் முடிந்தபிறகு எழுந்துசெல்ல மனமில்லாமல் அடுத்த காட்சியையும் இருந்து பார்த்துவிடலாமோ என்ற எண்ணமும் இந்தப்படத்துக்குத்தான் ஏற்பட்டது. எந்த சமரசமும் செய்துகொள்ளத் தேவையில்லாத காட்சிகளும், சிம்புவையும், த்ரிஷாவையும் தாண்டித் தெரியும் கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸி கதாபாத்திரங்களும், இயல்பாக நகரும் கேமராவும் எந்த இடத்திலும் உறுத்தாமல் படத்தோடு எம்மையும் அழைத்துச் செல்கிறது.

கார்த்திக் அவசரப்பட்டுத் தன் காதலை ஜெஸ்ஸியிடம் சொல்லிவிடும் இடத்தின் யதார்த்தமாகட்டும், ஜெஸ்ஸி தனக்குள் இருக்கும் காதலை தன்னை அறியாமலேயே ரயில்ப் பயணத்தில் வெளிப்பட்டுத்தும் அழகாகட்டும், காதலையும், குடும்பத்தையும் வைத்துக்கொண்டு குழம்பும் யதார்த்தமாகட்டும், தனது ஒட்டுமொத்தக் காதலையும் கார்த்திக் தனது முகத்திலேயே காட்டிவிடுவதாகட்டும் என ஒவ்வொரு காட்சிகளும் எம் உணர்வுகளையும் சேர்த்தே தூக்கிக்கொண்டு நகர்கின்றன.
 60771063_10042009_8
இசைப்புயலின் இசையில் ஏற்கனவே ஹிட்டாகிவிட்ட பாடல்கள் படமாக்கப்பட்ட விதத்தில் மனதில் முழுவதுமாக வியாபித்திருக்கின்றது. கூடவே காட்சிகளோடு ஒன்றிப்போகும் பின்னணி இசை இன்னமும் காதுகளில் இழையோடிக்கொண்டிருக்கின்றது.

படத்தின் கதையூடே இழையோடும் மென்மையான நகைச்சுவைகளும், காட்சிகளுக்கேற்ற சுருக்கமான வசனங்களுமாக படம் நகர்வது ரசிக்கவைக்கிறது. குறிப்பாக இந்த உலகத்தில எத்தனை பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் ஜெஸ்ஸியினைக் காதலிக்க வேண்டும் என அடிக்கடி கார்த்திக் கேட்பதும் பின்னர் ஜெஸ்ஸி கார்திக்கிடம் அதே கேள்வியைக் கேட்பதும் அழகு.

படத்தில் அழகாகத் தெரியும் ஜெஸ்ஸியும், சிம்புவாகவே தெரியாத கார்த்திக்கும், அவர்களின் அலட்டலில்லாதத நடிப்பும், யதார்த்தமான காட்சிகளுமாக மென்மையான ஒரு காதலை எங்கள் இதயங்களில் இருத்திவிட்டுச் செல்கிறது விண்ணைத்தாண்டி வருவாயா.

விண்ணைத்தாண்டி வருவாயா – என்னைத் தாக்கிவிட்டது.

Sunday, February 21, 2010

உண்மையின் விலை

37 comments
  
   original_Ajith_49396e497d0c8
இன்று மாலை திடீரென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கைப் பதிவர்களின் சந்திப்பை முடித்துவிட்டு கணினியைத் திறந்த எனக்கு நடிகர் அஜித் மன்னிப்புக் கேட்கமாட்டேன், வேண்டுமானால் நடிப்பை விட்டுவிடத் தயார் என்ற செய்திதான் மகத்தில் அறைந்தாற்போல் முதலில் கண்ணில் பட்டது.
 
வீட்டில் அப்பா கமல் ரசிகர், அம்மா அஜித் ரசிகர். இதனாலேயே இந்த இரண்டு நடிகர்களின் படங்களை சிறுவயதுமுதலே பார்ப்பதற்குத் தவறுவதில்லை. எனக்கு கமலைப் பிடித்துப்போனாலும், திரையைத்தாண்டி அஜித்தைப்பற்றிய செய்திகளால் அஜித்தும் என் மனதில் சிம்மாசனம் போட்டுத்தான் அமர்ந்திருந்தார்.
 
எனக்குத்தெரிந்து இதுவரை அஜித்துடன் நடித்த நடிகைகள் எல்லோருமே அவரைப்பற்றி கூறியது “அஜித் ஒரு Gentleman” என்பதுதான். ஏன், ஏனய பிற நடிகர்கள் பலரும்கூட அவரைப்பற்றிக்கூறுவது ஒரு சிறந்த மனிதர். மனதில் எதையுமே வைத்திருக்கமாட்டார். வெளிப்படையாகப்பேசிவிடுவார் என்பதுதான்.
 
இந்த உண்மை பேசும் குணமே அவருக்கு ஆப்பாக அமைந்திருக்கிறது. அரசியல்வாதிகள் தூக்கிப்போடும் எலும்புத்துண்டுக்கு வாலாட்டும் கூட்டம் ஒன்றுகூடி உண்மை பேசியதற்காக மன்னிப்புக்கேட்கவேண்டுமென்று அறிக்கை விட்டிருக்கிறது. என்னைப்பொறுத்தவரை ஆமை புகுந்த வீடு போலத்தான் அரசியல் புகுந்த இடமும். கலையைக் கலையாக மதிக்கத்தெரியாதவர்கள்தான் இன்று உயர்ந்த அந்தஸ்தில் கலைஞராக, பெருந்தலைகளாக இருந்துகொண்டு கலையைக் கற்பழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

Film-chamber-1
உண்மைபேச கற்றுக்கொடுத்த தமிழர் பரம்பரையினர் இன்று உண்மை பேசிய அஜித் தமிழன் இல்லை என்று வாய் கிழியக் கத்துகின்றனர். உண்மைகள் கசப்பாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாதவர்களும், கலையை மதிக்கத்தெரியாதவர்களும் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் சிறியவர்களே.
 
சினிமா அமைப்புக்களையும், இன்னபிற பெருந்தலைகளையும் வரிசையாக நிற்கவைத்து முகத்தில் காறி உமிழவேண்டும்போல் இருக்கிறது. நாசமாப் போங்கடே
 

Saturday, February 6, 2010

அசல் திரைவிமர்சனம்

19 comments

 

asal[5]

ஒரு இணை இயக்குனராக அஜித் அவதாரம் எடுத்திருக்கும் படம் அசல். தகப்பனாக வரும் அஜித்தின் இரண்டாவது தாரத்துக்குப் பிறந்தவர் ஹீரோ அஜித். தனது சொத்துக்களை அசல் வாரிசுகளுக்கு எழுதிவைக்காமல், அஜித்துக்கு எழுதிவைத்துவிட்டு தந்தை இறந்துவிட, தந்தையின் தோற்றத்தில் இருக்கும் அஜித்மீது ஏற்கனவே பொறாமையில் இருக்கும் அவரது தம்பிமாரால் வரும் பிரச்சினைகளைகளையும் அதை எப்படிச் சமாளிக்கிறார் என்பதும்தான் கதை. ஆனால் அதையே கொஞ்சம் சுவாரசியத்தோடு சொல்வதில் வெற்றிபெற்றிருக்கிறார் சரண்.

அஜித், படம் முழுக்கவே அசத்துகிறார். அவரது பாடி லேங்க்விஜும், சிகார் பிடிக்கும் ஸ்டைலும், ஸ்டைலான நடையுமாகக் கலக்குகிறார். அவரது உடலுக்குப் பொருத்தமான காஸ்ட்யூம் மறைக்கவேண்டியவற்றை மறைத்து, அஜித்தை இன்னும் எடுப்பாகக் காட்டுகிறது. நடனம் வழமையான அஜித் பாணி. அவ்வளவாக ஆடாவிட்டாலும், அதுவும் வேண்டாமோ என்று தோன்றியது. சண்டைக்காட்சிகளில் காட்டும் வேகமும், கம்பீரமுமாக படம முழுவதையுமே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்.

bhavana பாவனா, இந்தப்படத்தோடு அப்படியே மனதில் பச்சக் என்று ஒட்டிக்கொண்டுவிட்டார். அனியாயத்துக்கு அழகாக இருக்கிறார். அழகாக வெட்கப்படுகிறார், அவ்வப்போது கவர்ச்சி காட்டுகிறார், சூப்பராகச் சிரிக்கிறார், அப்படியே கடைசியில் அஜித்தைக் கைப்பிடித்தும் விடுகிறார். கலக்கலான ஒரு இன்னசன்ட் கதாபாத்திரத்துக்கு நன்றாகவே பொருந்தியிருக்கிறார் இவர்.

 

சமீரா ரெட்டி. அளவான ஆடைகளோடு அஜித்தை உரசிக்கொண்டே திரிந்தாலும் ஏனோ அவ்வளவாகக் கவரவில்லை. ஒட்டுமொத்த இடத்தையும் பாவனாவே எடுத்துக்கொண்டுவிட்டார். சமீரா, ஐ ஆம் சாரி.

யூகிசேது, சிரிக்கவைத்தாலும், சீரியசான நேரங்களில் கடுப்பைக் கிளப்புகிறார். இடைவேளைக்குப் பிறகு எற்படும் தொய்வுக்கு இவரது பாத்திரமும் காரணமாக இருக்கலாம். குறைத்திருக்கலாம், அல்லது தவிர்த்திருக்கலாம்.

பிரபு நட்புக்காக வந்திருப்பதாலோ என்னவோ இறுதியில் நண்பருக்காகக் கொஞ்சம் அடிவாங்கிவிட்டுப் போகிறார். அவ்வளவுதான். வேறு சொல்லும்படியாக எதுவும் செய்துவிடவில்லை.

asal-050210[5]

படத்தின் ஒளிப்பதிவு அசத்துகிறது. மலேசியாவையும், பிரான்சையும் அப்படியே கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள். அதிலும் ஆரம்பக்காட்சி படு அசத்தல். வேகமான சண்டைக்காட்சிகளும் கச்சிதமாகவே படமாக்கப்பட்டிருக்கின்றன.

இசை பரத்வாஜாமே? டைட்டிலில் மட்டும் தெரிந்தார். அதன்பிறகு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. பாடல்களில் துஸ்யந்தா கலக்கல். இப்போது ‘டொட்டடொய்ங்’ம் பிடிக்கிறது – பாவனாவுக்காக.

கிளைமார்க்ஸ் காட்சி அக்மார்க் தமிழ்ப்படம். பலதடவை பார்த்தமாதிரி இருக்கிறது. இறுதியில் வந்த சண்டைக்காட்சிகூட முன்னயவற்றை விட சுமார். ஏனோவென்று முடிந்துவிடுகிறது.

மொத்த்ததில் அசல் – அஜித் – அசத்தல்.

Saturday, December 19, 2009

வேட்டைக்காரன், பதிவுலகம், இன்னபிற…

18 comments

வேட்டைக்காரன் விமர்சனங்கள் பலவற்றைப் படித்தபின்பும், வேட்டைக்காரனைப் பார்த்துவிட்டு வந்த விஜய் ரசிகராக இருக்கும் நண்பனைக் கேட்டுவிட்டும் முடிவெடுத்துவிட்டேன். படத்தைப்பார்க்க தியேட்டருக்குப் போவதில்லை என்று. வரும் பொங்கலுக்கோ, இல்லை மாட்டுப் பொங்கலுக்கோ சன் டீவியில் உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக திரைக்குவரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றிருக்கிறேன். படத்தைப்பார்த்து, விமர்சனம் எழுதி என்னைக் காப்பாற்றிய அனைத்துப் பதிவர்களுக்கும் நன்றிகள்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

பதிவு எழுதுவதால் அது வருங்காலத்தில் சோறு போடப்போவதில்லை. பக்கத்து வீட்டுக்காரனுக்கே எங்களை அடையாளம் தெரியாத இன்றய அவசர உலகத்தில் பதிவு எழுதிப் பிரபலம் என்று சொன்னால் சிரிப்புத்தான் வருகிறது. பின்னூட்டங்கள், ஓட்டுக்கள், ஹிட்ஸ் எல்லாவற்றையுமே அதிகமாகப் பெற்றுக்கொள்வதற்கு எத்தனையோ குறுக்கு வழிகள் இருக்கின்றன. ஆனால் பதிவு எழுதுவதால் கிடைக்கும் ஒரே பிரதிபலன் நண்பர்கள்தான். இப்படிக் கிடைக்கும் நண்பர்களுக்கிடையேயே ஆப்பு வைக்க யாராவது முகம்தெரியாதவர்கள் முயலும்போது ஆத்திரம்தான் வருகிறது.  இப்படிக் குறுக்கு வழிகளால் இவர்கள் சாதிக்க நினைப்பது எதனை என்றுதான் புரியவில்லை.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

A9 வீதியினூடான யாழ்ப்பாணத்திற்கான பயணம் இலகுவாக்கப்பட்டிருக்கிறதாம். இதன் பின்னாலிருக்கும் அரசியல்களைத் தவிர்த்துவிட்டுப் பார்க்கலாம். ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை 20000 ரூபா செலவுசெய்து வீட்டிற்குச் சென்று ஒருமாதம் இருந்துவிட்டு வரும் என்னைப்போன்றோருக்கு இது மகிழ்ச்சியான செய்திதானே? சனி, ஞாயிறோடு இரண்டு தினங்கள் கம்பஸ்சை கட் அடித்துவிட்டால் போதும். வீட்டுக்குச் சென்றுவந்துவிடலாம்.  இதற்கு அரசியல்களைக் கலந்து பின்னூட்டங்கள் வேண்டாமே.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

இலங்கையின் இரண்டாவது பதிவர் சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்று முடிந்த்து. இது தொடர்பாக பலரும் பதிவிட்டுவிட்டதால் இனிமேல் நானும் பதிவிடுவது கூறியது கூறலாக அமையும் என்பதால் இங்கே இடுகிறேன். சந்திப்பு தொடர்பாக அறிவித்தல்களை வெளியிட்ட திரட்டிகள், வானொலிகள், பத்திரிகைகள் அனைத்திற்குமே நன்றிகள். கலந்துகொண்ட பதிவர்கள் அனைவருக்குமே ஏற்பாட்டுக் குழுவில் ஒருவன் என்ற வகையில் நன்றிகள். அன்று ஏற்பாட்டு வேலைகள் சிலவற்றில் கவனம் செலுத்தவேண்டி இருந்ததால் கலந்துரையாடல்களில் கருத்துக்களைத் தெரிவிக்க முடியவில்லை. வெறுமனே கேட்டுக்கொண்டிருக்கவே முடிந்தது. இருந்தாலென்ன, இறுதியில் பதிவர்கள் நன்றிகூறி விடைபெறும்போது பெற்ற மகிழ்ச்சிக்கு இணையே இல்லையே!

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

இந்தப் பதிவோடு எனது வலைத்தளத்தைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை 150 ஆக மாறியுள்ளது. நன்றி நண்பர்களே!

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

வழமையாக திங்கட்கிழமைகளில் வரும் சரக்கு வித் சைடிஸ் தான் இது. சிலபல காரணங்களுக்காக இன்று இடவேண்டி வந்துவிட்டதால் வேறு பெயரில்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

உண்மைக் காதல்





Thursday, December 17, 2009

வேட்டைக்காரன் தோற்றுவிட்டால்?

22 comments



குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பிடித்த நடிகராக ஒரு சில வருடங்களுக்கு முன்னர் வலம்வந்த விஜய் இப்போது குழந்தைகளுக்கு விஜய்கிட்ட புடிச்சுக் குடுத்துடுவன் என்று வெருட்டி பெண்கள் சாப்பாடு ஊட்டும் நிலைக்கு வந்துவிட்டார் என்றால் அதற்கு காரணம் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. விஜய் ஜோக்ஸ் என்ற பெயரில் எங்களுக்கும் கலகலப்பூட்டுகிறார் விஜய்.

வேட்டைக்காரனுக்கு வரும் எதிர்ப்பு என்ற பெயரிலான பிரச்சாரத்தையும், சன் குழுமத்தின் விளம்பரத்தையும் தாண்டி வேட்டைக்காரன் தோற்றுவிட்டால்?



1. வேட்டைக்காரன் வெற்றிபெறப்போகிறது என்று எழுதிவரும் பதிவர்கள் இனி சுறா வெற்றிபெறும் என்று எழுதத் தொடங்குவார்கள். விஜயை வறுக்கும் பதிவுகள் அதிகமாகும்.

2. விஜயின் ஐம்பதாவது படத்துக்கு தியேட்டரே கிடைக்காது.

3. பழைய படப் பெயர்களை யாரும் தொடக்கூட மாட்டார்கள்.

4. ஜேம்ஸ் கமரூனின் அவதார் போன்ற படங்களை தவிர்த்து தமிழ்ப் படங்களைப் பார்க்கும் சாதாரண மக்கள் கூட வேறு மொழிப் படங்கள் மேல் காதல் கொள்வர்.

5. இயக்குனர் பாபு சிவனை யாருமே தேடமாட்டாரகள்.

6. எந்த மொக்கைப்படத்தையும் ஓடவைக்கலாம் என்ற சன் பிக்சர்சின் நினைப்புக்கு மரண அடி விழும்.

7. விஜய ஆன்டனி – விஜய் கூட்டணியை யாருமே கவனிக்கமாட்டார்கள் என்பதுடன் அவர் இனி விஜய்க்கு இசையமைக்கவே வரமாட்டார்.

8. ஏற்கனவே படம் பாரக்காமல் விஜய் படத்துக்கு விமர்சனம் எழுதும் பதிவர்கள் குருவி பட விமர்சனத்தையே மீள்பதிவாக வேட்டைக்காரனுக்கும் இடுவார்கள்.

9. இந்தப் படக் கூட்டணியை யாருமே கவனிக்கமாட்டார்கள்.

10. விஜய் – த்ரிஷா ஜோடியால் த்ரிஷா ஓரங்கட்டப்பட்டது போல அனுஷ்காவும் ஓரங்கட்டப்படலாம்.

11. Blonde Jokes, Sartharji Jokes போல தமிழருக்கென தனியான நகைச்சுவையாக விஜய் ஜோக்ஸ்  உருவாகலாம்.

12. வேட்டைக்காரன் ஓடும் என்று பதிவுபோட்டு ஹிட்ஸ் தேடிய பதிவர்களின் ஹிட்ஸ் குறையலாம்.

13. நம்ம சதீஷ்க்கு விஜயைப் பிடிக்காமல் போகலாம்.

14. .நான் இந்த பதிவு போட காரணமாக இருந்த சதீஷ் வேட்டைக்காரன் வென்றுவிட்டால் என போட்ட பதிவினைப்போல சுராவிற்கு போடாமல் தப்பிக்கலாம்

15. தியேட்டர் திரைகள் விஜய் ரசிகர்களால் கிழிக்கப்படலாம்.

16. படத்தைப் புறக்கணிப்போம் என்ற பெயரால் படத்துக்கு மறைமுக விளம்பரம் செய்யும் சிலர்??? இதை நீங்களே சொல்லுங்கள் அவர்கள் கதி என்னாகும்

17. இதைவிடக் கொடுமை, இனி விஜய் இப்படிப் படங்களில் நடிக்காது விடுவதால் எமக்கு பதிவிட விசயமே கிடைக்காது போகலாம்.




டிஸ்கி 1 – இந்தப்பதிவு சதீஷின் இந்தப் பதிவுக்கு எதிர்ப்பதிவு அல்ல.

டிஸ்கி 2 – இது நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது.



Monday, November 30, 2009

சரக்கு வித் சைடிஸ் – 30.11.2009

29 comments
அண்மையில் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது கேட்டார், உங்களுக்கு எப்போதும் இல்லாத சமூக அக்கறை பதிவெழுதத் தொடங்கியவுடன் மாத்திரம் எங்கிருந்து வந்துவிடுகிறது என்று. அதற்கு நான் எங்கிருந்து வந்தாலென்ன, நல்ல விடயம்தானே என்றேன். விடாத அவர் அதெப்படி எல்லாப் பதிவர்களுக்கும் சொல்லி வைத்தாற்போல வருகிறது? அடுத்தவர்களிடமிருந்து உங்களைப் பிரித்துக் காட்டுவதற்காக நீங்கள் எடுக்கும் ஆயுதம்தான் இது என்றார். இதற்கு நான் கொடுத்த பதிலைப் பிறகு தருகின்றேன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

**********

பின்னூட்டம் இடப்படும்போது தானியங்கிமுறையில் இடப்படும் Spam பின்னூட்டங்களை தடுப்பதற்காகவே Word Verification பயன்படுகின்றது. தமிழ்ப் பதிவுகளில் Spam பின்னூட்டங்கள் பெரிதாக வருவதில்லை என்பதாலும், Word Verification படிப்பவர்களை எரிச்சற்படுத்தும் என்பதாலும் யாரும் அதை செயற்படுத்துவதில்லை.

ஆனால் அண்மைக்காலமாக எனக்கு அப்படியான Spam பின்னூடங்கள் நாள் ஒன்றுக்கு ஒன்று வீதம் வருகின்றன. ஒரு நிறுவனத்தின் விளம்பரத்துக்காகவே அது இடப்படுகிறது. (அந்த நிறுவனத்திற்கும் தமிழ் பதிவுலகிற்கும் எந்த சம்பந்தமுமில்லை) பின்னூட்டங்களை மட்டுறுத்தி வைத்திருப்பதனால் அவற்றை வெளியிடுவதில்லை. பின்னூட்டங்களை மட்டுறுத்தாத பதிவர்கள் இது தொடர்பாக கொஞ்சம் அவதானமாக இருங்கள். இல்லாவிட்டால் பதிவுகளை அவை குப்பையாக்கிவிடும்.

**********

இணையத்தில் மேய்ந்துகொண்டிருந்தபோது மின் அகராதி ஒன்று கண்ணில் தட்டுப்பட்டது. ஆங்கிலம் – தமிழ், தமிழ் – ஆங்கிலம் ஆகிய இருவழிகளிலும் தேடிக்கொள்ளலாம் என்பதால் எனக்கு அதிகம் பயன்படுகிறது. உங்களுக்கும் பயன்படலாம். பார்வையிட இங்கே சொடுக்கவும்.


**********

பரீட்சை முடிவடைந்த்தால் DVD யில் ஈரம் படம் பார்க்கக் கிடைத்தது. வித்தியாசமான கதைக்கரு. படம் இறுதிவரை சுவாரசியம் குறையாமல் இருந்தது சிறப்பு. காதலையும் ஹீரோயிசத்தையும் தவிர்த்து வரும் படங்களை தமிழ் சினிமாவில் தாராளமாக வரவேற்கலாம் - இறுதிவரை பார்க்கமுடிந்தால்!


**********



பேராண்மை திரைப்படமும் இப்போதுதான் பார்க்கக்கிடைத்தது. அருமையான கதை. ஆனால் ஆரம்பத்தில் இரட்டை அர்த்த வசனங்களும், சாதி வெறிக் காட்சிகளும் – ஒரு துளி விஷம். தவிர்த்திருக்கலாம். ஆனால் மேலே கூறிய காரணத்துக்காகவே இதைப் பாராட்டலாம்.


**********
இதற்கு வார்த்தைகள் தேவையா?










Monday, November 16, 2009

கமலும் நயனும் இன்னுமொரு செயின் ரியாக்சனும்

405 comments





இன்னுமொரு செயின் ரியாக்சன், அதுதான் தொடர் பதிவு. இந்தப் பதிவுக்கு சந்ரு அண்ணாவால் அழைக்கப்பட்டிருக்கிறேன். பிடிக்காவிட்டாலும் சமாளித்துக்கொண்டு வாழப் பழகிவிட்ட இன்றய வாழ்க்கைமுறைக்குள் பிடிக்காதவற்றையும் சொல்லியாகவேண்டிய பதிவு. இது பிடித்திருக்கிறது.

பிடித்தவர், பிடிக்காதவரை அப்படியே சொல்லிவிடவேண்டும் என்ற காரணத்தாலேயே எனக்கு ஆர்வமில்லாத, அல்லது நழுவல் போக்கை கடைப்பிடிக்கவேண்டிய தலைப்புகளை விட்டுவிட்டு, சிலவற்றை மாற்றியிருக்கிறேன். அழைத்தவரும், ஆரம்பித்தவரும் மன்னிப்பார்களாக.

நடிகர்

பிடித்தவர் – கமல்

இவருடைய ஒரே போட்டியாளர் ரஜினியே தனது நடிப்பின் குரு இவர்தான் என்று சொல்லிவிட்டபிறகு நான் என்ன சொல்ல, இவரைப்பற்றி?

பிடிக்காதவர் – சிம்பு

இவரது தகப்பனார் பாணியிலேயே சொல்லிவிடுகிறேன்.

பெயரோ சிம்பு
தலையிலே இவருக்கு இரு கொம்பு
வாய் முழுதும் வம்பு
தாங்க முடியவில்லை இவர் பண்ணும் அலும்பு

நடிகை

பிடித்தவர் – ஜோதிகா

படம் முழுவதும் இவரது முகத்தையே காட்டலாம். அவ்வளவு நடிப்பையும் அதிலே காட்டிவிடுவார். சந்திரமுகி அதன் உச்சம். இப்போதெல்லாம் சூர்யாமீது கடுப்பாகவே இருக்கிறது – கொஞ்சம் தாமதித்திருக்கலாம்.

பிடிக்காதவர் – நயன்தாரா

இப்போது பாட்டியாகிவிட்ட இவரை எனக்கு ஆரம்பத்திலிருந்தே பிடிப்பதில்லை. காரணம் – கொஞ்சம் ஓவர் பில்டப்

எழுத்தாளர்

பிடித்தவர் - சுஜாதா

ஒரு தலைமுறையே இவரது எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொள்ளும்போது நான் மட்டும் விதிவிலக்கா என்ன?

பிடிக்காதவர் – சாரு

இவரிடம் காணப்படும் ஒருவகைக் கர்வம் இவரிடமிருந்து என்னைக் கொஞ்சம் தள்ளியே வைத்திருக்கிறது.

இசையமைப்பாளர்

பிடித்தவர் – A. R. ரஹ்மான்

நான் இவரது வெறியன் என்றுகூடச் சொல்லலாம். இவர் இசையமைத்த தமிழ்ப் பாடல்கள் அத்தனையும், பெரும்பாலான ஹிந்திப் பாடல்களும் எனது சேமிப்பில். ஆனால் என்னவோ, இவரது ஆரம்பகாலப் பாடல்களைப் போல இப்போதய பாடல்கள் கவர்வதில்லை. கண்டனங்கள் – தயாரிப்பாளர்களுக்கு.

பிடிக்காதவர் – விஜய் ஆன்டனி

ஆத்திசூடியைக் கொலை செய்தது ஒன்றே போதுமே.

பாடகர்

பிடித்தவர் – S. P. பாலசுப்பிரமணியம்

இவரது தமிழ் உச்சரிப்பும், தன்னடக்கமும், நேர்த்தியும் என்னைக் கவர்ந்தவை.

பிடிக்காதவர் – உதித் நாராயணன்

அடித்துக் கொல்லத்தூண்டும் தமிழ்.  அது ஒன்றே போதுமே.

பாடகி

பிடித்தவர் – சித்ரா

இவரது புன்னகை சிந்தும் முகமும், இவரது குரலும் என்னைக் கவர்ந்தவை

பிடிக்காதவர் – ஸ்ரீலேகா பார்த்தசாரதி

இவரது குரல் எனக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை

விளையாட்டு 

பிடித்தது – கிரிக்கெட்

ஏழாவது வயதில் கையில் Bat உடன் ஆரம்பித்தது. இன்னமும் என்னைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.

பிடிக்காதது – WWF

மனிதர்களை மனிதர்களே அடித்துக்கொள்ளும் விளையாட்டு – நாம் கற்காலத்திலிருந்து நாகரிகத்தால் வளர்ந்துவிட்டோமா?

இதைத் தொடர நான் அழைப்பது




Friday, November 6, 2009

இந்தப் பதிவை யாரும் படிக்க வேண்டாம்

40 comments

டிஸ்கி 1 – இது வயது வந்தவர்களுக்கு மட்டுமான பதிவு. சிறுவர்கள் விலகிவிடுவது நல்லது.

டிஸ்கி 2 – பலவீனமான இதயம் கொண்டவர்கள் இதற்குமேல் படிப்பது நல்லதல்ல.

டிஸ்கி 3 – இரத்த அழுத்த நோய் கொண்டவர்கள் விலகிவிடுவது உத்தமம்.

டிஸ்கி 4 – உங்களால் அதிர்ச்சியைத் தாங்க முடியாவிடின் இது உங்களுக்கான இடம் அல்ல

டிஸ்கி 5 – பச்சிளம் பாலகர்கள் பார்க்கவே கூடாத இடம் இது

டிஸ்கி 6 – இதைப் பார்த்துவிட்டு தற்கொலை முயற்சில் இறங்கினால் அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

டிஸ்கி 7 – இந்தப் பதிவைப் படித்துவிட்டு ஆத்திரத்தில் உங்கள் கணினியை உடைத்தால் அதற்கான செலவு உங்களுடையதே

டிஸ்கி 8 – மேற்சொன்ன காரணத்துக்காக அலுவலகத்தில் இருப்பவர்கள் இதைத் தவிர்ப்பது நலம்

டிஸ்கி 9 – இந்தப் பதிவுக்குப் பிறகு லோஷன் அண்ணாவின் ‘நண்பர்களை’ எனக்கு நண்பர்கள் ஆக்கிக்கொள்ளும் எண்ணம் இல்லை.

டிஸ்கி 10 – இது சும்மா, பத்து வரவேண்டுமென்பதற்காக.

இதுதான் மேட்டரு

.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.






Tuesday, October 20, 2009

ஆதவனும் அறுந்த செருப்புகளும்

28 comments



எந்தப் பிறப்பில் செய்த பாவமோ, பண்டிகை நாட்களில் படம் பார்க்கும் பழக்கம் அண்மைக்காலங்களில் தொற்றிக்கொண்டுவிட்டது. ஆதவன் பார்த்தவர்கள் எழுதியிருந்த விமர்சனங்கள், ஆதவன் பார்க்கப் போவது சொந்த செலவில் சூனியம் வைக்கும் வேலை என்று தெரிந்திருந்தாலும், பேராண்மை திரையிடப்பட்ட ரொக்சி திரையரங்கில் படம் பார்ப்பதற்கு, நடு ரேட்டில் குப்புறப்படுத்துக்கொண்டு குருவி படம் பார்ப்பது எவ்வளவோ மேல் என்பதால் வேறு வழியின்றி ஆதவனிற்காய் சினிசிட்டிக்கே சென்றேன்.


மதியநேரக் காட்சிக்காய் சென்றிருந்தபோதும், அங்கு நின்றிருந்த கூட்டம் இரவுக்காட்சிவரை இருந்த நான்கு திரையரங்குகளையும் நிரப்பப் போதுமானதாக இருந்தது. எப்படியாவது ஆதவன் பார்த்தே தீருவது என்ற முடிவோடு கூட்டத்தோடு கூட்டமாக ஐக்கியமானேன்.


அடுத்த காட்சிக்கு டிக்கட் கொடுக்கத் தொடங்கினார்கள். எவ்வளவோ முயன்றும் திரையரங்கிற்கு அருகில் கூட செல்ல முடியவில்லை. எனக்கு முன்னால் நின்றிருந்தவர் காலைக்காட்சிக்கு வந்தவராம். அவருக்கும் அதே கதிதான். அதற்கு முதல்நாள் நடந்த விசேட காட்சிக்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தும் செல்லாததற்கு எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.


கொஞ்ச நேரத்தில் போறுமை இழந்த கூட்டம் நமது மூதாதயரின் புத்தியைக் காட்டத் தொடங்கியது. கம்பித் தடுப்புக்களினூடு ஏறிக் குதித்தும், போஸ்டர்களைக் கிழித்தும் அட்டகாசம் செய்யத் தொடங்கியது.  யன்னலைத்திறந்து தியேட்டர் மேலாளர் கத்திய கத்தலும், அதன்பின் கதவை மூடிய வேகமும், விவேக் பாணியில் சொல்வதென்றால் அப்பவே மைல்டா எனக்கொரு டவுட் வரத்தான் செய்தது.



எதிர்பார்த்தது போலவே அடுத்த சில நிமிடங்களில் போலீஸ்காரர் பொல்லுகளுடன் வந்திறங்கினர். எப்படி ஓடினேன் என்று எனக்கே தெரியாது. வீதியின் அடுத்த பக்கத்தில் நின்றிருந்தேன். ஏறத்தாள ஒட்டுமோத்தக் கூட்டமும் ஓடிவிட, கம்பிகளுக்கு மேலே ஏறி வித்தை காட்டிக்கொண்டு இருந்தவர்களுக்கு தமது தீபாவளிப் பரிசுகளைக் கொடுத்துவிட்டு காணாமல் போனது போலீஸ்.


மீண்டும் பழைய குருடி, கதவைத் திறடி கதைதான். ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் நீதி, நேர்மை, நியாயம், தர்மம் எல்லாம் பார்க்காமல் வரிசையில் கொஞ்சம் முன்னால் ஒடிச்சென்று நின்றுகொண்டேன்.


அடுத்த காட்சிக்கு டிக்கெட் கொடுக்கத் தொடங்கினார்கள். அப்போதுதான் முதன்முறையாக தியேட்டரை அண்மித்தேன். போலீஸ் தடியடியின் எச்ச சொச்சங்களாக அறுந்துபோன செருப்புக்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. ஒரு வழியாக டிக்கெட் கிடைத்தது. படம் பார்த்து முடித்து வெளியே வந்தபோதும் கூட்டம் குறைவில்லை. ஐந்தாறு போலீசார் நிரந்தரமாகவே வெளியில் முகாமிட்டிருந்தனர். செருப்புக்களின் எண்ணிக்கையும் கொஞ்சம் அதிகமாகத்தான் தெரிந்தது.


பண்டிகை நாட்களில் படம் பார்க்கும் எண்ணத்தையும், கூடவே சூர்யா மீது வைத்திருந்த நம்பிக்கையையும் அந்தச் செருப்புகளுடனேயே தூக்கிப்போட்டுவிட்டு வந்து சேர்ந்தேன்.


எனது ஆதவன் விமர்சனத்தைப் படிக்க இங்கே அழுத்துங்கள்.



Saturday, October 17, 2009

ஆதவன் – முற்றுமுழுதாக ஒரு பார்வை.

31 comments



நண்பன் ஒருவனை நீண்ட காலத்துக்குப் பிறகு சந்தித்த்தாலும், அவனும் நானும் சேர்ந்து தியேட்டருக்குப் போக எடுத்த முயற்சிகள் முன்பு பலமுறை தோற்றதாலும் இன்று எப்படியாவது அவனுடன் ஆதவன் பார்ப்பது என முடிவானது. தியேட்டருக்கு போன பிறகுதான் அது எப்படிப்பட்ட முட்டாள்தனமான முடிவு என்பது உறைத்தது. போலீஸ் வந்து தடியடி தடாத்துமளவுக்கு அங்கே நிலமை இருந்தது. ஒருவழியாக மூன்றரை மணிநேர காத்திருப்புக்குப் பிறகு தியேட்டருக்குள் நுளைய முடிந்தது. இலங்கையில் இவ்வளவு ரசிகர்கள் சூர்யாவுக்கு இருப்பது எனக்கு இப்போதுதான் தெரியும்.


காத்திருந்ததற்கு குறைவைக்கவில்லை படத்தின் முதல்பாதி. விறுவிறு ஆரம்பமும், கூடவே சேர்ந்துகொண்ட வடிவேலுவின் நகைச்சுவையும் இடைவேளைவரை தொடர்ந்தது. நீண்ட காலத்துக்குப் பிறகு வடிவேலுவின் நகைச்சுவை ரசிக்கக்கூடியதாக இருந்தது. கந்தசாமியில் டிக்கி ஆட்டியதுபோல எங்களை நெளியவைக்கவில்லை. பல ஒற்றை வசனங்களே இன்னும் நினைத்து நினைத்துச் சிரிக்க வைக்கின்றது. Hats off வடிவேலு.


சரோஜாதேவி, இன்றய நவநாகரிகப் பாட்டி, ஓ சாரி அம்மம்மாக்களின் (படத்தைப் பாருங்க, புரியும்) பிரதிபலிப்பு. அவருக்காகப் பாடல் காட்சி வேறு. கலக்கல். அதிலும் பாடலில் அவரது காட்சிகளை கறுப்பு – வெள்ளையில் காட்டியது அழகு.


வில்லன் ராகுல் தேவ் அசத்தல். ஆனால் அவரை ஒரு டாக்டராகத்தான் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. டாக்டர்களுக்கான ஒரு வரையறை மனதில் பதிந்துவிட்டது காரணமாக இருக்கலாம். பெரிய குழுவுக்கே தலைவனான அவர் ஆள் வைத்துக் கொலை செய்வதற்குச் சொல்லும் காரணமும் ப்ச். அவ்வளவு ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரது காட்சிகளில் லாஜிக் ஓட்டைகள் நிறைய. சரிசெய்திருக்கலாம்.


நயன்தாரா. இவரது அறிமுகக் காட்சியில் மாத்திரமே விசில். அதன்பிறகு இவரை யாரும் கணக்கிலேயே எடுக்கவில்லை. சிம்புவும், பிரபுதேவாவும் அப்பாடா தப்பித்தோம் என்று தாராளமாகச் சொல்லிக்கொள்ளலாம். கழுத்துக்கு மேலேயும் கொஞ்சம் கவனீங்க அம்மணி.




சூர்யா, நடிப்பில் அதே வேகம். நடனக் காட்சிகளுக்கு கைதட்டல் வாங்குகிறார். ஆரம்பத்தில் வடிவேலுவுடன் இணைந்து கலக்கியெடுக்கிறார். ஆனால் இவரது பத்து வயதுக் கதாபாத்திரத்தோடுதான் மனம் ஒட்ட மறுக்கிறது. அதில் வேறு யாரையாவது நடிக்க வைத்திருக்கலாம். கடைசி வாரணம் ஆயிரத்தில் வந்த வயதிலாவது நடித்திருக்கலாம். முடியல.


இடைவேளை வரை கலகல + விறுவிறுவாகப் போய்க்கொண்டிருந்த திரைப்படம் இடைவேளைக்குப்பிறகு கறுமம் பிடித்த காதல் ஆரம்பித்ததாலோ என்னவோ கொஞ்சம் தொய்யத் தொடங்கிவிடுகிறது. இத்தனைக்கும் படத்தில் நேரடிக் காதல் காட்சிகள் இல்லை. லாஜிக் மீறல்கள் தாராளமாக தமது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கின்றன. அதிலும் அந்த கிளைமாக்ஸ் காட்சி, ஐயோ அம்மா, முடியலடா சாமி.


ரெட் ஜெயன்ட் மூவீசின் குருவியில் விமானம். இதில் ஹெலிகொப்டர். அடுத்த படத்தில் ராக்கெட், ஏவுகணை என்று ஏதாவது முயற்சிசெய்வார்கள் போல. வில்லன் உடனடியாக வெடிக்கும் ராக்கெட் லாஞ்சரை அடிக்காமல் டைம் செட் செய்து வெடிப்பதை அடித்துவிட்டு, அது வெடிக்கும்வரை காத்திருக்காமல் பறந்துவிடுவாராம். அதை சூர்யா பிடுங்கி ஹெலிகொப்டரில் பாய்ந்து குத்துவாராம். ஐயோ, தமிழ் ரசிகர்கள் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படியான அபத்தங்களை தாங்குவதோ தெரியவில்லை. ஏதாவது புதுசா யோசீங்கப்பா.


மொத்தத்தில் ஆதவன் – அரை அறுவை. முதல் பாதி மட்டும் மூன்றுமுறை பார்க்கக்கூடிய படம்.


இறுதியாக ஒரு சந்தேகம். படம் முழுவதும் முருகா, முருகா என்ற டயலாக் வருகிறதே, ஒருவேளை நம்ம உண்மைத்தமிழன் அண்ணாச்சி டயலாக் எழுதியிருப்பாரோ?


Monday, September 21, 2009

உன்னைப்போல் ஒருவன்

17 comments



கமலின் பாணியிலான விறுவிறு வேகம், ஆங்கிலப்படத்துக்கேயுரிய நீளம், ஆங்காங்கே உறுத்தாத நகைச்சுவை, அருமையான ஒளிப்பதிவு, படத்தையே தூக்கிநிறுத்தும் பின்னணி இசை, அளவான பாத்திரங்கள், அருமையான நடிப்பு. இதுதான் உன்னைப்போல் ஒருவன்.


சண்டைக்காட்சிகள் இல்லாது, பாடங்கள் இல்லாது, முக்கியமாக ஹீரோயின் இல்லாது ஒரு தமிழ்ப்படம்  எடுத்ததற்கே கமலைப் பாராட்டலாம். ரீமேக்தான் என்றாலும் இப்படித் தமிழில் எடுப்பதற்கே ஒரு துணிச்சல் வேண்டும்.  தமிழ் சினிமாவில் புதுமை புகுத்துவதென்றால் அது கமலாகத்தான் இருக்கமுடியுமென்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார்.


தவறிவிழும் ஒற்றைத் தக்காளியைக்கூட பொறுக்கி எடுத்துக்கொண்டு வரும் கமல், ஆறு இடங்களில் குண்டு வைத்திருப்பதாக கமிஷனருக்கு போன் செய்யும்போதே நிமிர்ந்து உட்காரவைத்துவிடுகிறார் இயக்குனர்.  இறுதிவரை அந்த ஆர்வத்தைக் குறையவிடாமல் அப்படியொரு வேகம், இறுதிக்காட்சிவரை தொடர்கிறது.


படத்தில் தன் வீட்டுக்கு பெட்ரேல் குண்டு எறிந்ததாக்க் கம்ப்ளயின்ட் கொடுக்க வரும் விஜய், சாரி அந்த புது அரசியல்வாதி நடிகர் அற்புதமாகச் சிரிக்கவைக்கிறார் என்றால் பின்னர் எலக்சனுக்கு எந்தப்பிரச்சினையும் இல்லையே என்று கேட்கும் காட்சியில் முதல்வர் எல்லாத்தையுமே தூக்கிச்சாப்பிட்டுவிடுகிறார். அரசியல்வாதிகளின் புத்தியை அப்படியே காட்டியிருக்கிறார்கள்.


கமல், மோகன்லால், போலீஸ் ஆபிசராக வரும் அந்த இரு  இளைஞர்கள், கம்ப்யூட்ட்ர் ஹாக்கராய் வரும் இளைஞன், டிவி சேனல் ரிப்போர்ட்டராய் வரும் அனுஜா ஐயர், லக்ஸ்மி எல்லோருமே பாத்திரமறிந்து நடித்திருக்கிறார்கள். வசனங்களில் இரா. முருகன் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார்.







மென்பெருளைப் பயன்படுத்தி வேகமாகப் பயணிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் கமல், சரளமாகப் பேசப்படும் ஆங்கிலம் என்பன சராசரி ரசிகனிற்குப் புரியுமா என்பது சந்தேகமே என்றாலும் படத்தின் விறுவிறுப்பிற்கு அவை நிறையவே கைகொடுத்திருக்கின்றன. 



படத்தின் சில காட்சிகளில் சினிமாத்தனம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இப்படி ஒரு தமிழ்ப்படம் பார்த்ததே அவற்றையெல்லாம் எழுதவிடாமல் செய்துவிட்டது.



உன்னைப்போல் ஒருவன்  - ஒரு சாதாரணனின் கோபம், கொஞ்சம் சினிமாத்தனமாக.


Monday, July 20, 2009

Transformers 2

4 comments



பார்ட் 1 தந்த தைரியத்தில் பார்ட் 2 பார்க்கப்போனால் ஏன்டா வந்தாய் என்று செருப்பால் அடித்தமாதிரி இருந்தது படம். படம் முழுவதும் ரோபோக்களின் பைட். இடையில் அவ்வப்போது கதாநாயகன், கதாநாயகி கூடி முத்தமிடுவதும், குத்துப்பாட்டு மட்டும் இருந்திருந்தால் நம்ம விஜய் படம் பார்த்த திருப்தியாவது கிடைத்திருக்கும். படத்தில் கதையென்று சொல்வதற்கு பெரிதாக ஏதுமில்லை. படம் முழுவதும் தகரத்தைப் போட்டு வெட்டுவதுபோல ஒரே சத்தம். முடியல.

படத்தின் அனிமேசனுக்கு ஒரு பெரிய சல்யூட்டே கொடுக்கலாம். அவ்வளவு நேர்த்தி. உருண்டுவரும் போல்ஸ்கள் குட்டி ரோபோவாக எழுந்துநிற்பது, வானத்தில் இருந்துவரும் பந்து தண்ணீரில் யம்ப் பண்ணி, புலிவடிவ ரோபோவாக மாறி யம்ப்புவது என சொல்லிக்கொண்டே  போகலாம். ரோபோ அழுவது முதல், அத்தனை உணர்ச்சிகளையும் முகத்தில் கொண்டுவந்திருக்கிறார்கள். அதிலும் ஹீரோவுக்கு உதவும் அந்த பச்சை, மற்றும் சிகப்பு ( பெயர் வாயில நுளையலப்பா, தெரிஞ்சவங்க பின்னூட்டுங்க) ரோபோக்கள் சண்டையிட்டுக்கொள்ளும் காட்சிகளில் அவை ஆண், பெண் ரோபோக்களோ என சந்தேகம் வருகிறது. பார்த்தால் உடலமைப்பும் அப்படியே. கிரேட்!. கிளைமார்க்சில் பிரமிட்டை உடைக்கும் ரோபோவை கீழேயிருந்து காட்டும்போது தியேட்டரே அதிர்கிறது.

முதல்பாகத்ததில் இறந்த வில்லன் ரோபோ மீண்டும் உயிர்பெறுவதும் நம்ம ஆப்டிமஸ் இறப்பதும், பின் ஹீரோ அவருக்கு உயிர் கொடுப்பதும் ரோபோக்களின் மூதாதயர்கள் மறைத்து வைத்திருக்கும் சூரியனை அழிக்கும் இயந்திரத்தை அழிப்பதும்தான் கதை. இறந்த ஹீரோ மறுபடியும் உயிர்பெறும் காட்சியில் லாஜிக் இருப்பதாகக் காட்டினாலும் நம்ம தமிழ்ப்பட ஞாபகம் வருவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை. மற்றபடி அந்த விறுவிறு நேரத்திலும் ஹீரோயின் ஓடிவரும் காட்சியில் பெரிய்ய்..ய ‘ம்ம்….’ தான் வருகிறது.


வசனங்களில் ஆங்கிலப்படத்திற்கே உரிய கெட்ட வாடை. சில இடங்களில் வசனங்கள் புல்லரிக்க வைக்கிறது, சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறது. என்னைப் பொறுத்தவரை முன்னரே சொன்னதுபோல அப்படியே நம்ம விஜய் படம், பாட்டு மட்டும் மிஸ்ஸிங். அனிமேஷனுக்காக (மட்டும்) பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம்.

Saturday, May 9, 2009

என்னை ஏமாற்றிய தமிழ் சினிமா :-(

2 comments

Lecture கட் அடித்துவிட்டு தியேட்டருக்குப் போன சுபாங்கன்  திரும்பியபின்னும் ஏதோ தன் காதலி வேறொருத்தனுடன் ஓடிப்போன மாதிரிக் கவலையுடன் உட்கார்ந்திருந்தான். தியேட்டர் பாடம் முடித்துவந்த அவனது புத்தகப்பையோ ஒரு பாட்டில் விஸ்கியை ஒரே மிடறில் குடித்தமாதிரி ஒரு மூலையில் சுருண்டு கிடந்தது. இன்னும் எத்தனை பேரைத்தான் இப்படிப்பட்ட படங்களால் ஏமாற்றப்போகிறார்கள் என்று நினைக்க அவனுக்கு எரிச்சல்தான் வந்தது. அந்தப் படத்தில் ஒருசில காட்சிகளைத் தவிர எல்லாமே உண்மைக்குப் புறம்பாக இருந்ததே அவன் கடுப்புக்குக் காரணம்.

இந்த இடத்தில் எந்தப் படத்தில்தான் அப்படிப்பட்ட காட்சிகள் இல்லை என அவனை நீங்கள் ஆறுதல்படுத்த நினைத்தால் நீங்கள் உண்மையான தமிழ் சினிமா ரசிகர்தான். ஆனால் அவற்றையெல்லாம் தாண்டிய ஒன்றுதான் அவனால் பொறுக்க முடியவில்லை.

என்னைப்போல இன்னும் எத்தனை பேரைத்தான் இப்படிப்பட்ட படங்களால் ஏமாற்றப்போகிறார்கள்? திரும்பத் திரும்ப இந்தக் கேள்விதான் அவனைக் குடைந்துகொண்டிருந்தது. அது என்னவென்று அறியுமுன் அவன் Flashback கொஞ்சம் பார்த்தால்தான் உங்களுக்கும் அவன் பிரச்சினை புரியும்.

பல பரீட்சைகளில் மட்டை அடித்தாலும் இறுதிப் பரீட்சையில் எப்படியோ Merritt இல் பாசாகி Campus க்கு தெரிவாகிவிட்டான் சுபாங்கன். அவனுக்கு கம்பஸ் என்றால் எப்படி இருக்கும் என்றெல்லாம் பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை. சில, பல தமிழ் சினிமாக்களில் பார்த்த College வாழ்க்கை போல மிகவும் மகிழ்ச்சியாக Enjoy செய்யலாம், ஹீரோவைப் போல நாள் முழுக்க ஊர் சுற்றினாலும் இறுதியில் First class இல் பாஸாகலாம் போன்ற பல கனவுகளுடன் Campus இற்குள் காலடி எடுத்து வைத்த அவனுக்குக் கிடைத்ததெல்லாம் இரண்டு மாதத்தில் முடியும் Semester முறையும், இரண்டு நாளில் submit செய்ய வேண்டிய இருபது பக்க Assignment உம்தான். இதெல்லாவற்றையும் விடக் கொடுமையாக Libraryயே கதி என்று கிடந்த Girls அவனது கண்களுக்குத் தட்டுப்படாததால் ஆரம்பத்தில் அது ஆண்கள் மட்டும் படிக்கும் Campus என்றே நினைத்திருந்தான்.

இந்த நிலைமையில்தான் அவனுக்கு ‘தல’ நடித்த(?) ஏகன் படம் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அவிழ்ந்து விழுவதற்கென்றே சாரி கட்டிய Lecturer நயன்தாராவும், அவரைப்பார்த்து ‘மியாவ்’ என்று கத்தும் மாணவன்  ‘தல’யும், அவனுக்குக் கடுப்பைத்தான் வரவைத்தன. தொப்பையுடன் திரியும் ‘தல’ யைப்போல் அவனது Campus இலும் ஒருசில மாணவர்கள் திரிவதைத்தவிர வேறெந்த ஒற்றுமையும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.  கூடவே படத்தில் காட்டியதுபோல ஒரு Campus இல் ப(ந)டித்தால் எப்படி இருக்கும் என்ற ஆசையும் சேர்ந்து அவனை வாட்டி வதைத்தது.  ஆண்டு ஒன்றில் படித்த வேற்றுமையும் ஒற்றுமையும் பாடம் அப்போதுதான் நன்றாக விளங்குவது போல இருந்தது.

‘தல’ சொன்ன “மியாவ்” அடிக்கடி நினைவுக்கு வந்து தொல்லை கொடுத்தாலும் அடுத்தநாள் அதே Campus க்கு மீண்டும் புறப்பட்டான். “வள்” என்று விழும் Lecturerஐ எண்ணி நடுங்கியவாறே…
Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy