
கனவோடு வாழ்ந்து தலை
நரைகூடக் கண்டபின்னும்
என் காதலினை உனக்குக்கூற
தைரியம் வரவில்லையடி
கண்டால் முறுவுவதும் பின்
கண் சிமிட்டிச் சிரிப்பதுவும்
கையசைத்துக் கதைப்பதுவும் உன்
காற்கொலுசும் கவிதையடி
உன் கன்னக் குழியினிலே
கவிழ்ந்துவிட்ட என்னோடம்
கரைகாண வழியின்றிக்
கலங்கித் தவிக்குதடி
கண்ணாடி பிம்பங்களும் என்
கண்கடந்து போவோரும்
காண்போரெல்லாம் உன்னுருவாய்க்
கண்ணுக்குத் தெரியுதடி
நழினங்கள் இழையோடும் நம்மவர் நாட்டியமும்
அதிரடி இசையோடும் தற்கால நாட்டியமும்
அங்கங்கள் குலுங்க ஆடும் ஆபிரிக்க நாட்டுயமும்
உன் நடையெனும் நாட்டியத்தின் கடைகூட இல்லையடி
கடிதங்கள் எழுதுகிறேன், அனுப்ப வழி தேடுகிறேன்
தூதுவிடப் புறாவுமில்லை, உன் தூரத்து உறவுமில்லை
உன்னண்பி எனக்கு இன்னும் நண்பியும் ஆகவில்லை
என் கடதாசிக்காதல் உனைக் கண்டு கரை சேருமாடி
2 comments:
hi,
ur poem is nice to read and enjoy. wish u all the best ..........akila
@ akila
Thanks
Post a Comment