Tuesday, January 18, 2011

சின்னதாய்ச் சில…


 

 cry-blood-red-tears

 யுத்தம் விட்டுச்சென்ற

கந்தகக் குழிக்குள்ளும்

எட்டிப்பார்க்கிறது ஈரம்..!

 

 

 tired_beggar

 

முன்பனி இரவு

பிச்சைக்காரன் தட்டில்

ஒடுங்கி விழுகிறது

ஒற்றைத்துளி..!

 

 

2980119739_5c2d5c897a_z

 

கனவுகளற்ற உறக்கத்தின்

கடைசிக் கணத்தின்பின்...

ஐயோ கொல்லாதே..!

 

 

stock-photo-old-wooden-billboard-isolated-over-white-66932572

 

தறித்தெடுத்துச் சீவப்பட்ட

நீள்சதுர மரத்துண்டில்

'மரங்களை வெட்டாதீர்' !

 

 

 

 

 

red_balloon

 

பறித்துக்கொண்டு பறக்கிறது.

எக்கணமும் வெடிக்கலாம்

சிறுவனின் உலகம்!

 

 

 

 

400_F_13058099_OQIrIq0jf7oazuJhVK1kWmokcaA9sVD7 

அரைத்தூக்கச் சிரிப்பில்

அம்மாவுக்கும் தெரிகிறது

குழந்தையின் கனவு!

20 comments:

Vathees Varunan on January 18, 2011 at 11:08 PM said...

கவிதைகள் ஆழமானவையாக இருக்கின்றன

ம.தி.சுதா on January 18, 2011 at 11:22 PM said...

மிக மிக அருமையான வரிகள் சுபா...

ARV Loshan on January 18, 2011 at 11:23 PM said...

பதிவை வாசித்து முடித்த பின் வந்த முக்கிய கேள்வி.. படங்களைப்பார்த்துக் கவிதைகள் வந்தனவா ..
அல்லது கவிதைகளுக்காகப் படங்கள் தேடினீர்களா என்பதே...

சிறுவனின் உலகமும், மரங்களைத் தறிக்காதீரும் நெஞ்சைத் தொட்டவை.

வந்தியத்தேவன் on January 18, 2011 at 11:25 PM said...

கவிதைகளும் அதற்க்கு பொருத்தமான படங்களும் கலக்கல்.

கன்கொன் || Kangon on January 18, 2011 at 11:41 PM said...

// தறித்தெடுத்துச் சீவப்பட்ட

நீள்சதுர மரத்துண்டில்

'மரங்களை வெட்டாதீர்' ! //

மிகவும் பிடித்துப் போன, மிகவும் இரசித்த ஒன்று.
சிலவேளை லோஷன் அண்ணாவின் பதிவை வாசித்துவிட்டு இங்குவந்ததால் வந்த உணர்வாகவும் இருக்கலாம். :-(

எளிமையாக, அழகான கவிதைகள்....

anuthinan on January 18, 2011 at 11:51 PM said...

//தறித்தெடுத்துச் சீவப்பட்ட
நீள்சதுர மரத்துண்டில்
'மரங்களை வெட்டாதீர்' //

அதிகம் பிடித்து இருக்கிறது இந்த கவிதை!!!

யோ வொய்ஸ் (யோகா) on January 19, 2011 at 12:23 AM said...

அருமை

நிரூஜா on January 19, 2011 at 12:47 AM said...

யதார்த்தமான வரிகள் தோழரே. உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி on January 19, 2011 at 5:35 AM said...

எல்லாமே நன்றாகவே இருக்கின்றன! மரங்களை வெட்டாதீர் மிகவும் பிடித்துள்ளது!!

தர்ஷன் on January 19, 2011 at 10:38 AM said...

முதலாவதும் கடைசியும் நெகிழ்வு
இரண்டாவது அழகு
நான்காவது பஞ்ச்
அதற்கடுத்தது திகில் "The red balloon " படத்தை ஞாபகப்படுத்தியது

Unknown on January 19, 2011 at 2:37 PM said...

அருமை..நான் நினைக்கிறேன் படங்கள் பின்னர் கவிதை என்று!!

Subankan on January 19, 2011 at 2:39 PM said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள். கவிதை, பின்னர்தான் படங்கள் :)

Bavan on January 19, 2011 at 5:01 PM said...

அருமை..:)
ரசித்தேன்..:)

கார்த்தி on January 20, 2011 at 10:13 PM said...

படங்களுக்கேற்றால்போல் கவிதைகள்!! சூப்பர்.... தொடர்ந்தும் வரட்டும்!

ஷஹன்ஷா on January 20, 2011 at 10:50 PM said...

ஆழமான கவிவரிகள்..!
சிறுவனின் உலகம் என்னை தொட்டுச் சென்றது..

Unknown on January 24, 2011 at 12:42 PM said...

நல்லாயிருக்கு எல்லாமே! கடைசிக்கவிதை மிகவும் கவர்கிறது என்னை!

செல்வா on January 25, 2011 at 4:45 PM said...

//தறித்தெடுத்துச் சீவப்பட்ட
நீள்சதுர மரத்துண்டில்
'மரங்களை வெட்டாதீர்' !
//

இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா ..

மன்னார் அமுதன் on February 1, 2011 at 12:42 PM said...

மரங்களை வெட்டாதீர் -- சிறந்த முரண் கவிதையாக உள்ளது.. சிறுவனின் உலகம், குழந்தையின் கனவு போன்றவையும் என்னை மிகவும் கவர்ந்தன...அழகான எழுத்தாக்கங்கள்.. உங்கள் இலக்கியப் புலமையை இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டு விருத்தி செய்து கொள்ள வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவீர்களா சுபாங்கன்

Unknown on February 11, 2011 at 9:06 PM said...

unkal eluthukolkal erayvanal aasirvathikappaddavai..valththukal..

rajamelaiyur on August 19, 2011 at 12:14 PM said...

தமிழ்மணம் முதல் vote

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy