Thursday, December 2, 2010

ம்…


Sad

வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்ட
ஊமல் கொட்டைகளினதும்
மண் கட்டிகளினதும்
எறி பிடி விளையாட்டு

தண்ணீர் நிரம்பிய
சதுரக் குழிகளுக்குள்
சறுக்கி விழுந்து அடித்த நீச்சல்

எங்கேயோ கேட்ட
குட்டி ஒலிக்கும்
குளறி அடித்த அதிரினலீன்

கையாலாகாமல் இருந்துகொண்டு
இணையத்தின் முன்னால்
எறியப்படும் பெருமூச்சு

பேச நாதியின்றி
எமக்குள் பேசியபடி
நானும், இன்னுமொரு பொம்மையும்

பெரிதாகத்தான் தெரிகிறது
குதிக்கால் ஊன்றிப் பெருவிரல் இட்ட
குட்டி வட்டம்

15 comments:

கன்கொன் || Kangon on December 2, 2010 at 7:22 PM said...

ம்... :-)

ம.தி.சுதா on December 2, 2010 at 7:28 PM said...

ஃஃஃஃகையாலாகாமல் இருந்துகொண்டு
இணையத்தின் முன்னால்
எறியப்படும் பெருமூச்சுஃஃஃஃ

அருமையாக இருக்கிறது சுபா.. வாழ்த்துக்கள்...

ம.தி.சுதா on December 2, 2010 at 7:29 PM said...

ஃஃஃஃகையாலாகாமல் இருந்துகொண்டு
இணையத்தின் முன்னால்
எறியப்படும் பெருமூச்சுஃஃஃஃ

அருமையாக இருக்கிறது சுபா.. வாழ்த்துக்கள்...

ஆயில்யன் on December 2, 2010 at 8:08 PM said...

ம்ம்! :)

//பெரிதாகத்தான் தெரிகிறது
குதிக்கால் ஊன்றிப் பெருவிரல் இட்ட
குட்டி வட்டம்//

எச்சுஸ்மீ இந்த பெருவிரல் வட்டம் நீங்க இட்டதா..? கொடுத்துவைச்சவங்க எதிர்ல நின்னவங்க :)

கட்டிக்கப்போறவங்கள பத்திகேட்டா மாமாவுக்கு வெக்கத்தை பாருன்னு மீனா பிரபுவை பார்த்து கேக்குற பட நினைப்பு சம்பந்தமேயில்லாம இப்ப வந்து தொலைக்குது ! :)

Bavan on December 2, 2010 at 8:08 PM said...

ஹிம்ம்..:)

vasu balaji on December 2, 2010 at 9:06 PM said...

ஹூம்ம்ம்:(.

balavasakan on December 2, 2010 at 9:07 PM said...

//பெரிதாகத்தான் தெரிகிறது
குதிக்கால் ஊன்றிப் பெருவிரல் இட்ட
குட்டி வட்டம்//

ம்..ம்..

தனா on December 2, 2010 at 9:47 PM said...

நான் செய்வதை நீங்கள் சொல்லிவிடீர்கள்.......:(

//ஃஃஃஃகையாலாகாமல் இருந்துகொண்டு
இணையத்தின் முன்னால்
எறியப்படும் பெருமூச்சுஃஃஃஃ

ஷக்தி on December 2, 2010 at 10:22 PM said...

"கையாலாகாமல் இருந்துகொண்டு
இணையத்தின் முன்னால்
எறியப்படும் பெருமூச்சு"

அருமை..

sinmajan on December 3, 2010 at 1:05 AM said...

ம்.. எனது தளத்திலும் தொடர்கிறது ;)
http://nizal-sinmajan.blogspot.com/2010/12/blog-post.html

நிரூஜா on December 3, 2010 at 1:49 AM said...

ம் :)

வந்தியத்தேவன் on December 3, 2010 at 5:25 AM said...

ஆயில்ஸ் இவரும் சின்னமாமாதான் ஆகவே இந்தப் பிரபுவைப் பார்த்து வெட்கப்பட்ட மீனா யார் என்பதை எம் புலனாய்ப்புப் பிரிவு தேடிக்கொண்டிருக்கின்றது.

சுபாங்கு கவிதை கொஞ்சம் புரிகின்றது.

Jana on December 3, 2010 at 2:25 PM said...

ம்ம்ம்... விட்ட பெருமூச்சுக்காற்று சுடவில்லை..சிலிர்க்கின்றதே!!

S.M.S.ரமேஷ் on December 3, 2010 at 2:30 PM said...

//கையாலாகாமல் இருந்துகொண்டு
இணையத்தின் முன்னால்
எறியப்படும் பெருமூச்சு//

எறியப்படும் பெருமூச்சிற்கும் உண்டு
எரிமலையாய் தகிக்கும் குணம்
காலப்போக்கில்!

பலர் அனுபவித்த வலி இது!

//எங்கேயோ கேட்ட
குட்டி ஒலிக்கும்
குளறி அடித்த அதிரினலீன்//

நோ கமெண்ட்ஸ்!
superb!

கார்த்தி on December 3, 2010 at 10:20 PM said...

பெரிதாகத்தான் தெரிகிறது
குதிக்கால் ஊன்றிப் பெருவிரல் இட்ட
குட்டி வட்டம்

கூடுதலாக ரசித்த வரிகள்!

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy